சினிமா
நடிக்க வாய்ப்பில்லாமல் வருத்தப்படும் ஆண்ட்ரியா
தமிழில் பல வெற்றி படங்களில் நடித்த ஆண்ட்ரியா, தற்போது பட வாய்ப்பில்லாமல் வருத்தப்படுவதாக கூறியிருக்கிறார்.
தரமணி, வடசென்னை என நடிப்பில் கலக்கும் ஆண்ட்ரியா இன்னொரு பக்கம் பாடல்கள் பாடுவதிலும் பிசியாக இருக்கிறார். தனியாக கச்சேரிகள் நடத்தியும் வருகிறார். நடிப்பு, பாடல் எது முக்கியம் என்று கேட்டதற்கு அவர் கூறியதாவது:
‘இரண்டும் இரண்டு கண்ணு மாதிரி. தனித்தனியாக நான் இதுதான் பிடிக்கும்னு சொல்லமுடியாது. ரெண்டுமே பிடிக்கும். என்ன ஒரு வருத்தம்னா, இந்த வருடம் நடிகை ஆண்ட்ரியாவுக்குப் பெரிய வாய்ப்பு இல்லாம போச்சு. பாடகியா மட்டும்தான் இருக்கேன். வந்த சில படங்களையும் கதை சரியில்லை என்று மறுத்துட்டேன்." என்று கூறியுள்ளார்.