சினிமா
களவாணி படத்தை தொடர்ந்து விமல் நடிப்பில் உருவாக இருக்கும் சோழ நாட்டான் படத்தில் தேசிய விருது பெற்ற நடிகை நடிக்க இருக்கிறார்.
களவாணி வெற்றியை தொடர்ந்து விமல் நடிக்கும் புதிய படம் "சோழ நாட்டான்". இப்படத்தை பட்டுக்கோட்டை ரஞ்சித் கண்ணா இயக்குகிறார். இப்படத்தில் கதாநாயகியாக கார்ரொன்யா கேத்ரின் நடிக்கிறார். இவர் தமிழில் அறிமுகமாகும் முதல் படம் இது. இவர் தெலுங்கில் நாயகியாக 4 படங்களில் நடித்துள்ளார். அது போக சிறந்த நடிகை மற்றும் நடனத்திற்கான தேசிய விருது பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்படம் பற்றி நாயகியிடம் கேட்ட போது, ‘எனக்கு தமிழ்நாடு மற்றும் தமிழ் படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும், இயக்குனர் கதை சொல்லும் போதே எனக்கு படம் பிடித்துவிட்டது கதை ரொம்ப நல்லா இருக்கு சார் நான் தான் பண்ணுவேன் என்று உடனே ஒப்புக்கொண்டேன்.
இந்த படம் எனக்கு நல்ல வரவேற்பை தரும். தமிழில் சிறந்த நாயகியாக வருவேன் என்று நம்புகிறேன்’ என்றார்.