சினிமா
ஞானவேல் ராஜா - சிம்பு

சிம்பு மீதான புகார் பொய்யானது - ஞானவேல் ராஜா

Published On 2019-10-09 20:39 IST   |   Update On 2019-10-09 20:39:00 IST
சிம்பு நடிப்பில் உருவாகி வரும் மப்டி படத்தைப் பற்றி வெளியான புகாருக்கு தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மறுப்பு தெரிவித்துள்ளார்.
டி.ராஜேந்தரின் மகன் சிம்பு. கதாநாயகன், டைரக்டர், பாடலாசிரியர், பாடகர் என்று பன்முகம் கொண்டவர். இவர் பல சர்ச்சைகளிலும் சிக்கி இருக்கிறார். கெட்டவன், மன்மதன், ஏஏஏ என்று பல படங்களில் சிம்பு மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இவருக்கு ரெட் கார்ட் கொடுக்க கூட தயாரிப்பாளர் சங்கம் சார்பாக முடிவுகள் எடுக்கப்பட்டது.

இந்நிலையில், சிம்பு நடிக்கும் ‘மப்டி’ என்னும் கன்னட படத்தின் ரீமேக் தற்போது கைவிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. சிம்பு சரியாக படத்தின் ஷூட்டிங்கிற்கு வரவில்லை என்று தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சங்கத்தில் புகார் அளித்துள்ளார் என்றும் கூறப்பட்டது.



ஆனால், ஞானவேல் ராஜா தரப்பில் இந்த செய்திகள் வதந்தி என்று கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே மப்டி படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவு பெற்ற நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் நடக்க இருப்பதாக ஞானவேல் ராஜா தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

Similar News