சினிமா
தர்பார் படப்பிடிப்பை புறக்கணித்தாரா நயன்தாரா?
சம்பள பாக்கி காரணமாக தர்பார் படத்தின் படப்பிடிப்பை நயன்தாரா புறக்கணித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் ‘தர்பார்’. பேட்ட படத்தின் வெற்றிக்கு பிறகு ரஜினி நடிப்பதாலும் நீண்ட இடைவெளிக்கு பிறகு போலீஸ் அதிகாரியாக அதிரடியான கதாபாத் திரத்தில் நடிப்ப தாலும் படத்துக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தர்பார் படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்கிறார். தர்பார் படத்தின் படப்பிடிப்பு நிறைவு அடைந்துவிட்டது.
அடுத்து டப்பிங் உள்ளிட்ட வேலைகளை தொடங்க இருக்கிறார்கள். இந்த நிலையில் நயன்தாரா, தனக்கு பேசப்பட்ட சம்பளம் முழுமையாக தரப்படாததால் கடைசி நாள் படப்பிடிப்பை புறக்கணித்ததாக கூறப்பட்டது. தர்பார் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. பொதுவாக படத்தில் நடிக்கும் நடிக, நடிகைகளுக்கு படத்தில் ஒப்பந்தமாகும் போது குறிப்பிட்ட தொகையையும், மீத தொகையை டப்பிங் சமயத்திலும் வழங்குவார்கள்.
ஆனால், நயன்தாராவிற்கு வேறு ஒருவர் டப்பிங் செய்வதால் கடைசி நாள் படப்பிடிப்பின் போது முழு சம்பளத்தையும் நயன்தாரா பெற்று கொள்வது வழக்கம். தர்பார் படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பின்போது நயன்தாரா தனக்கு மீதம் இருக்கும் சம்பளத்தை கொடுத்தால் மட்டுமே கலந்துகொள்வேன் என்று கூறிவிட்டதாகவும் பின்னர் முருகதாஸ் மீதி சம்பளத்துக்கு தானே பொறுப்பேற்றுக் கொள்வதாக கூறிய பின்னரே கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.