சினிமா
கார்த்தி

சவால்களை விரும்பி எதிர்கொண்டேன் - கார்த்தி

Published On 2019-10-08 14:03 GMT   |   Update On 2019-10-08 14:03 GMT
கார்த்தி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் ‘கைதி’ படத்தின் விழாவில், சவால்களை விரும்பி எதிர் கொண்டேன் என்று அவர் கூறியுள்ளார்.
கார்த்தி நடிப்பில் டிரீம் வாரியர் பிக்சர்ஸ், விவேகானந்தா பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் “கைதி”. மாநகரம் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இந்த படத்திற்கு சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சாம்.சிஎஸ் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் கார்த்தியுடன் நரேன், ரமணா, மரியம் ஜார்ஜ் இணைந்து நடித்துள்ளனர். 

தீபாவளிக்கு வெளியாக இருக்கும் கைதி படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியில் கார்த்தி பேசியதாவது:- ’உதவி இயக்குநராக இருக்கும்போது சில படங்கள் செய்யனும்னு நினைக்கிற மாதிரி படங்கள் நமக்கு எப்போதாவது தான் வந்து சேரும். அந்த மாதிரி தான் மெட்ராஸ், தீரன் இப்ப “கைதி”. ஒரு களத்தில போய் அந்தக் கேரக்டரை தெரிஞ்சிக்கிட்டு பண்ற படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

இந்த படத்தில் நிறைய சவால்கள் இருப்பது தெரிஞ்சது அதை ஆசைப்பட்டு செஞ்சிருக்கேன். லோகேஷ் ரசிகருக்கு படம் எப்படி கொடுக்கனும்னு தெரிந்த டைரக்டர். இதில எந்த அளவு புதுசா பண்ண முடியுமோ பண்ணுங்கன்னு சொன்னேன். அத மொத்த டீமும் பண்ணியிருக்காங்க. 



முழுக்க முழுக்க நைட்ல ஷூட் பண்ணிருக்கோம். இதில நிறைய ஆக்‌ஷன் பண்ணிருக்கேன். இந்த படத்தில நரேன் கூட நடிச்சது சந்தோஷமான விஷயம். எப்போதும் வாழக்கையில எதை வேணாலும் பகிர்ந்து கொள்ளக்கூடிய நண்பர் அவர். இந்த படத்தில எல்லோரும் அவ்வளவு நேர்த்தியாக உழைச்சிருக்காங்க. 

ஒவ்வொரு கேரக்டரும் இந்த படத்தில வித்தியாசமா இருக்கும். இந்த படத்தில் நான் ஒரு பகுதி தான். இது ஒரு மல்டி ஹீரோ படமா இருக்கும். எல்லோருக்குமான பகுதி சரியாக அமைந்து இருக்கிறது. எனக்கு லாரி ஓட்டுவது ரொம்ப பிடிக்கும் அதுவும் இந்த படத்தில எனக்கு பழைய லாரிய கொடுத்துட்டாங்க. லாரி ஓட்டறது எவ்வளவு கஷ்டம்னு அப்போதுதான் தெரிஞ்சது. இந்தப்படம் முழுக்கவே ஆக்‌ஷனா அமைஞ்சிருக்கு. இந்த படத்தில் நிறைய விசயங்கள் புதுசா கத்துக்க முடிஞ்சது. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும். எல்லோருக்குமே பெரிய பேர் வாங்கித் தரும். ரசிகர்களுக்கு கண்டிப்பா பிடிக்கும்’ என்றார்.
Tags:    

Similar News