சினிமா
பாபு தமிழ்

இயக்குனராக அவதாரம் எடுக்கும் ஜீவி பட கதாசிரியர்

Published On 2019-10-01 07:41 GMT   |   Update On 2019-10-01 07:41 GMT
ஜீவி திரைப்படத்திற்கு கதை, திரைகதை, வசனம் எழுதிய பாபு தமிழ் ’க்’ என்ற படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுக்க உள்ளார்.
கால்பந்தாட்ட வீரனின் வாழ்க்கையை மையமாக வைத்து ’க்’ என்ற படம் உருவாகிறது. தர்மராஜ் பிலிம்ஸ் நவீன் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் பாபு தமிழ் எழுத்து இயக்கத்தில், அறிமுக நாயகன் யோகேஷ், குரு சோமசுந்தரம், அனிகா விக்ரமன், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகும் பாபு தமிழ் சமீபத்தில் வெளியாகி பாராட்டுகளையும், நல்ல விமர்சனங்களையும் பெற்ற ஜீவி திரைப்படத்திற்கு கதை, திரைகதை, வசனம் எழுதியவர்.  



தனது முதல் பெரிய போட்டியிலேயே பலமாக காயமடைந்து விடும் ஒரு கால்பந்து வீரரின் வாழ்வில், அதன்பின் நடக்கும் சம்பவங்கள், அதன் மூலம் கிடைக்கின்ற சில நுண்ணிய தகவல்கள், தனக்கு ஏன் இப்படி நடந்தது, எதனால் இந்த கதிக்கு ஆளானோம் என அவன் ஆராய முற்படுகிறான். அதன் முடிவில் அவன் தனது வாழ்வை சீரமைத்துக் கொண்டானா இல்லையா என்பதே படத்தின் கதை.

Tags:    

Similar News