சினிமா
நெடுஞ்சாலை பட நடிகைக்கு பெண் குழந்தை
ஆரியின் நெடுஞ்சாலை படத்தில் ஹீரோயினாக நடித்த ஷிவதாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
ஆரி நடித்த நெடுஞ்சாலை, கலையரசன் நடித்த அதே கண்கள் உட்பட ஒருசில தமிழ்ப் படங்களிலும், மலையாள திரைப்படங்களிலும் நடித்தவர் நடிகை ஷிவதா. இவர் சமீபத்தில் தனது நீண்டநாள் காதலரான முரளிகிருஷ்ணை என்பவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகை ஷிவதா கர்ப்பமான நிலையில் தற்போது அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
ஷிவதாவுக்கு கடந்த ஜூலை 20ந் தேதியே குழந்தை பிறந்திருந்தாலும் அவர் தற்போதுதான் இந்த தகவலை தனது சமூகவலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஷிவதாவின் குழந்தைக்கு அருந்ததி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஷிவதாவுக்கும் அவரது குழந்தைக்கும் உறவினர்களும், நண்பர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். ஷிவதா தற்போது பாபி சிம்ஹா நடித்த வல்லவனுக்கு வல்லவன், எஸ்.ஜே.சூர்யாவின் இரவாக்காலம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.