சினிமா
நடிகை கீர்த்தி சுரேஷ்

கொடைக்கானலில் அடுத்த படத்தை தொடங்கிய கீர்த்தி சுரேஷ்

Published On 2019-09-13 03:13 GMT   |   Update On 2019-09-13 03:13 GMT
தேசிய விருது பெற்ற கீர்த்தி சுரேஷ், அடுத்தாக தான் நடிக்கும் படத்தை கொடைக்கானலில் இருந்து தொடங்கி இருக்கிறார்.
பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி, மெர்க்குரி, பேட்ட படங்களை இயக்கியவர் கார்த்திக் சுப்புராஜ். இவர் அடுத்ததாக தனுஷை வைத்து படம் இயக்க இருக்கிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தற்போது லண்டனில் நடைபெற்று வருகிறது.

இவர் மேயாத மான், மெர்க்குரி போன்ற படங்களை ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் மூலம் தயாரித்து இருந்தார். தற்போது கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கும் புதிய படத்தை தயாரிக்கிறார்.

அறிமுக இயக்குனர் ஈஷ்வர் கார்த்திக் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் துவங்கி இருக்கிறது. கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில், முன்னணி இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் வழங்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்ய, அனில் கிருஷ் படத்தொகுப்பை கவனிக்கிறார். 



படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று, அடுத்த ஆண்டின் துவக்கத்திலேயே திரைக்கு வரும் வகையில் இப்படக் குழு திட்டமிட்டிருக்கிறது.
Tags:    

Similar News