சினிமா
திருப்பதியில் திருமணம் - வாரிசு நடிகை விருப்பம்
திருப்பதியில் தான் தனது திருமணம் நடக்க வேண்டும் என வாரிசு நடிகை ஒருவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் கடந்த ஆண்டு 'தடக்' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தற்போது புதிய படத்தில் நடித்து வருகிறார். தாய் ஸ்ரீதேவி போல் சாதிக்க வேண்டிய பணி இன்னும் நிறைய இருந்தாலும் திருமணத்தை எங்கு நடத்துவது என்று இப்போதே அவர் முடிவு செய்திருக்கிறார். சமீபத்தில் பட்டுச் சேலை அணிந்து விதவிதமாக போஸ் அளித்தார்.
பிறகு ஜான்வி கூறும்போது,’என் திருமணம் எங்கு நடக்க வேண்டும் என்பது பற்றி நான் எற்கனவே முடிவு செய்துவிட்டேன். அதுவும் பாரம்பரிய முறைப்படி திருப்பதியில் தான் திருமணம் செய்து கொள்வேன். அதுதான் எனது கனவு. என் அம்மா வழியில் தென் இந்திய பெண்ணாக இருந்து திருமணம் செய்ய விரும்புகிறேன். என் திருமணத்தில் இட்லி, சாம்பார், தயிர் சாதம் போன்றவை இடம்பெறும்’ என்றார்.