சினிமா
எதிர்பார்த்த அளவு சினிமா வாய்ப்புகள் வரவில்லை- பிக்பாஸ் பிரபலம் வருத்தம்
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப்பின் எதிர்பார்த்த அளவு சினிமா வாய்ப்புகள் வரவில்லை என பிரபல நடிகை வருத்தம் தெரிவித்துள்ளார்.
மெட்ராஸ், கபாலி, ஒருநாள் கூத்து படங்களில் நடித்தவர் ரித்விகா. பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்த சீசனில் பங்கேற்று வெற்றி பெற்றார். அதற்கு பின் சினிமாவில் பெரிய அளவில் வருவார் என்று எதிர்பார்த்தால் பெரிய படங்களில் அவரை பார்க்க முடியவில்லை. அவர் இதுபற்றி அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:- ’சினிமாவில் நடிக்கணும்னு ஆசைப்பட்டு வந்த பொண்ணு நான். ஆனால் 'மெட்ராஸ்' படத்துக்கு பிறகு பெரிய வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. முக்கியமாக, 'பிக்பாஸ்' நிகழ்ச்சிக்கு பிறகு பட வாய்ப்புகள் தொடர்ச்சியாக வரும்ன்னு நினைத்தேன்.
ஆனால், புகழ் கிடைத்ததே தவிர எதிர்பார்த்த அளவுக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. முன்னாடி இருந்தது மாதிரியேதான் இருக்கு. அதுக்காக நான் வருத்தப்படவும் இல்லை. அது ஒரு நிகழ்ச்சி அவ்வளவுதான். என்கூட அந்த வீட்டிலிருந்த ஹவுஸ் மேட்ஸ்கூட இன்னும் தொடர்பில்தான் இருக்கேன். அந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு, ஒருநாள் கமல் சாரை ஒரு நிகழ்ச்சியில் பார்த்தேன். அப்போ ரெண்டு பேரும் நலம் விசாரிச்சுக்கிட்டோம்’. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.