சினிமா
ஏ.ஆர்.ரஹ்மான், மணிரத்னம், வைரமுத்து

பொன்னியின் செல்வன் படத்தில் இத்தனை பாடல்களா?

Published On 2019-09-08 11:46 GMT   |   Update On 2019-09-08 11:46 GMT
மணிரத்னம் இயக்க உள்ள பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற உள்ள பாடல்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ வரலாற்று நாவலை தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் படமாக்கும் முயற்சியில் இயக்குனர் மணிரத்னம் ஈடுபட்டுள்ளார். அனைத்து மொழிகளில் இருந்தும் நடிகர்-நடிகைகளை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார்.

வந்தியத்தேவனாக கார்த்தி, அருள்மொழிவர்மனாக ஜெயம்ரவி, பூங்குழலியாக நயன்தாரா, சுந்தரசோழனாக அமிதாப்பச்சன் ஆகியோர் நடிக்கின்றனர். ஆதித்த கரிகாலனாக விக்ரம், குந்தவை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் ஆகியோரும். நந்தினி கதாபாத்திரத்துக்கு ஐஸ்வர்யாராய், பழுவேட்டரையர் வேடத்துக்கு சத்யராஜ் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. 

நடிகர்கள் பார்த்திபன், ஜெயராம் மற்றும் நடிகைகள் அமலாபால், ஐஸ்வர்யா லட்சுமி, திரிஷா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். பொன்னியின் செல்வனில் நடிக்கும் நடிகர், நடிகைகள் பட்டியலை விரைவில் அதிகாரபூர்வமாக வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர். ரூ.800 கோடி செலவில் இரண்டு பாகங்களாக இந்த படத்தை எடுக்கின்றனர்.



இந்நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ள இப்படத்திற்கு வைரமுத்து பாடல்களை எழுதவுள்ளார். ‘பொன்னியின் செல்வன்’ நாவல் நடந்த காலத்தில் பயன்படுத்தப்பட்ட தமிழ் சொற்களை இந்த கால இளைஞர்களுக்கும் புரியும் வகையில் பாடல் வரிகளில் வைரமுத்து புதுமை செய்யவிருப்பதாகவும் தெரிகிறது. 

மேலும் இந்த படத்திற்காக வைரமுத்து 12 பாடல்கள் எழுதவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. ரவிவர்மன் ஒளிப்பதிவில் உருவாகவிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
Tags:    

Similar News