சினிமா
அனுஷ்கா

அனுஷ்காவுக்கு ரசிகர்கள் ஆதரவு

Published On 2019-09-08 09:50 GMT   |   Update On 2019-09-08 09:50 GMT
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமான நடிகை அனுஷ்காவுக்கு ரசிகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
'பாகுபலி’ படத்தின் மூலம் தனது ரசிகர்கள் வட்டத்தை பெரிதாக்கி கொண்டார், அனுஷ்கா. தற்போது, மாதவனுடன் `நிசப்தம்‘ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். `இஞ்சி இடுப்பழகி’ படத்திற்காக பல மடங்கு எடையைக் கூட்டி நடித்திருந்தார். படத்தில் நடித்துமுடித்த பின்னர், எடையை குறைக்க அவர் நிறையவே பாடுபட்டார். அந்த சமயத்தில், தான் மேற்கொண்ட பயிற்சிகளையும் முயற்சிகளையும் புத்தகமாகத் தொகுத்து வெளியிட்டார். 

கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த படம், `பாகமதி’. அதன் பின்னர், சமீபத்தில் எடுத்த போட்டோஷூட்டில்தான் இவரை அவரது ரசிகர்கள் பார்த்தனர். ஐதராபாத் ஏர்போர்டில் நடந்து வந்துகொண்டிருந்த இவரை, புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர், அவரது ரசிகர்கள். ஆந்திராவை சேர்ந்த ஒரு தனியார் பத்திரிகை நிறுவனம், அந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்து, அவரை உருவக் கேலி செய்யும் விதமாக செய்தி வெளியிட்டிருந்தது. 



அதைப் பார்த்து கொந்தளித்த அனுஷ்கா ரசிகர்களும் மக்களும், அந்த நிறுவனத்தை விமர்சித்து அவர்களது கருத்தைப் பகிர்ந்து வருகின்றனர். அதில், ``ஒருவருடைய உருவத்தைவைத்து அவரைப் பற்றி எப்படி உங்களால் சொல்ல முடிகிறது. அனுஷ்காவின் காலடிக்குக்கூட நீங்கள் சமம் இல்லை. பேசும்போது நாவையும், எழுதும்போது கையையும் அடக்க வேண்டும். 

இதுபோன்ற ஒரு முன்னணி நடிகையை இவ்வாறு பேசுவது முறையல்ல’’ என்று தனது ஆதங்கத்தை வெளிக்காட்டியுள்ளார், ஒருவர். நிறைய பேர், வெளிவந்த அந்தச் செய்தியை எதிர்த்து கருத்து தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் கருத்துச் சுதந்திரம் இருக்கு என்பதற்காக ஒருவரை தவறாகப் பேசுவது நியாயமானதல்ல என்றும் பலர் கொந்தளிக்கின்றனர்.
Tags:    

Similar News