சினிமா
யாஷ்

கே.ஜி.எப். 2 படப்பிடிப்பில் மாற்றம்

Published On 2019-09-08 07:50 GMT   |   Update On 2019-09-08 07:50 GMT
கன்னட திரையுலகில் முன்னணி நடிகரான யாஷ் நடிப்பில் உருவாகி வரும் கே.ஜி.எப். 2 படத்தின் படப்பிடிப்பில் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கன்னட திரையுலகின் பிரம்மாண்ட தயாரிப்பான கே.ஜி.எப் திரைப்படம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் வெளியானது. கன்னட திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவரான யாஷ் கதாநாயகனாக நடித்திருந்த இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியானது. நான்கு நாட்களில் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

தற்போது கே.ஜி.எப் படத்தின் 2ம் பாகம் மிக பெரிய பொருட்செலவில் வருகிறது. முன்னதாக கோலார் தங்க வயல் அருகே திரைப்படத்திற்காக செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பால் அந்த பகுதியின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக வழக்கு தொடரப்பட்டது. 



நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், கே.ஜி.எப். 2ம் பாகத்தின் படப்பிடிப்பை ஐதராபாத்தில் நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது.
Tags:    

Similar News