சினிமா
ஜிவி பிரகாஷ், தனுஷ்

சிக்கலில் எனை நோக்கி பாயும் தோட்டா?- ரிலீசுக்கு தயாரான சிவப்பு மஞ்சள் பச்சை

Published On 2019-09-05 07:32 GMT   |   Update On 2019-09-05 07:32 GMT
எனை நோக்கி பாயும் தோட்டா படம் ரிலீசாவதில் சிக்கல் நீடிப்பதால், சிவப்பு மஞ்சள் பச்சை படம் நாளை ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’. இதில், தனுஷ் ஜோடியாக மேகா ஆகாஷும், முக்கிய கதாபாத்திரங்களில் சசிகுமார், ராணா, வேல ராமமூர்த்தி உள்ளிட்டோரும் நடித்துள்ளார்கள். தர்புகா சிவா இசையமைத்திருக்கும் இந்த படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் சார்பில் மதன் தயாரித்துள்ளார். 

2016-ம் ஆண்டிலேயே இதன் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்தது. இதையடுத்து படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் தயாரானபோது, படத்திற்கு மேலும் சில சிக்கல்கள் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. தயாரிப்பு தரப்பில் முந்தைய படங்களுக்கு வாங்கிய கடன்களால் இந்த படத்துக்கு பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்பட்டது.



இதனிடையே இப்படம் செப்டம்பர் 6ந் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு புரமோஷன் பணிகளும் தொடங்கப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தின் மீதான வழக்கு ஒன்றில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில் இந்த படம் நாளை ரிலீசாக வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.

எனை நோக்கி பாயும் தோட்டா படம் ரிலீசாவதில் சிக்கல் நீடிப்பதால், சசி இயக்கத்தில் ஜிவி பிரகாஷ், சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படம் நாளை ரிலீசாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Tags:    

Similar News