சினிமா
கலைமாமணி விருது விழா

2011 முதல் 2018 வரையிலான கலைமாமணி விருதுகளை வழங்கினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

Published On 2019-08-13 14:09 GMT   |   Update On 2019-08-13 14:09 GMT
2011 முதல் 2018 வரையிலான கலைமாமணி விருதுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் நடந்த விழாவில் வழங்கி இருக்கிறார்.
2011 முதல் 2018 வரையிலான கலைமாமணி விருது பெறும் கலைஞர்களின் பெயர் பட்டியலை தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்டது. தற்போது அவர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பட்டியலில் இடம் பெற்றவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தினார்.

சினிமாத்துறையில், ஆர்.ராஜசேகர், பாண்டு, குட்டி பத்மினி, பிரசன்னா, நளினி, வேல்முருகன், கார்த்தி, சரவணன், பொன் வண்ணன் உள்ளிட்ட பலருக்கு வழங்கப்பட்டுள்ளது.



இவ்விழாவில் மூத்த கலைஞர்களுக்கான உதவித்தொகை ரூ.2000-லிருந்து, ரூ.3000-மாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார்.
Tags:    

Similar News