சினிமா
கீர்த்தி சுரேஷ்

ரசிகர் கொடுத்த காதல் கடிதத்தை பத்திரமாக வைத்துள்ள கீர்த்தி சுரேஷ்- ஏன் தெரியுமா?

Published On 2019-08-13 03:00 GMT   |   Update On 2019-08-13 03:00 GMT
ரசிகர் ஒருவர் கொடுத்த காதல் கடிதத்தை பத்திரமாக வைத்துள்ளதாக நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.
தேசிய விருது கிடைத்த மகிழ்ச்சியில் இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். இப்போது மலையாளத்தில் மோகன்லாலுடன் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க கதையும் கேட்டு வருகிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு:- “சாவித்திரி வாழ்க்கை படத்தில் நடித்ததற்காக தேசிய விருது கிடைத்து இருப்பது மகிழ்ச்சி. மீண்டும் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க மாட்டேன். 

சாவித்திரி படம்தான் நான் நடித்த முதலும் கடைசியுமான வாழ்க்கை வரலாறு படமாக இருக்கும். சாவித்திரி என்ற மகா நடிகை வேடத்தில் நடித்த பிறகு இன்னொரு வாழ்க்கை படத்தில் நடிப்பது சிறப்பாக இருக்காது. சாவித்திரி வாழ்க்கை படப்பிடிப்பு முடிந்ததும் எதையோ விட்டு போனமாதிரி மனம் உடைந்து அழுது விட்டேன். 



இந்த சினிமா படப்பிடிப்பில் மனதோடு எல்லோரும் இணைந்து இருந்தோம். நான் ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸின் ரசிகை. இந்தியில் ஷாருக்கான், தீபிகா படுகோனே, அலியாபட் மிகவும் பிடித்தவர்கள். நயன்தாராவின் ‘டிரெஸிங் சென்ஸ்’, சிம்ரனின் நடனம் பிடிக்கும். ஒரு தடவை நகைக்கடையை திறந்து வைக்க சென்றபோது ஒரு ரசிகர் பார்சலை கொடுத்தார். 

அதை திறந்தபோது எனது படங்கள் அடங்கிய ஆல்பமும் என்னை காதலிக்கிறேன் என்று எழுதிய ஒரு கடிதமும் இருந்தது. கல்லூரி நாட்களில் யாரும் காதல் கடிதம் தரவில்லை. இது முதல் காதல் கடிதம் என்பதால் பத்திரமாக வைத்து இருக்கிறேன்.”

இவ்வாறு கீர்த்தி சுரேஷ் கூறினார்.
Tags:    

Similar News