சினிமா
வித்யாபாலன்

தமிழில் நிராகரித்தபோது உடைந்தேன்- வித்யாபாலன்

Published On 2019-08-12 10:45 GMT   |   Update On 2019-08-12 10:45 GMT
நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்துள்ள வித்யா பாலன், தமக்கு தமிழில் வாய்ப்பு மறுத்தபோது வருத்தப்பட்டதாக கூறினார்.
தமிழில் பல வாய்ப்புகளை நிராகரித்த வித்யா பாலன், கடைசியாக அஜித்துடன் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துவிட்டார். அதுவும் தனது மறைந்த தோழி ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பு என்பதால் நடித்திருக்கிறார். இது பற்றி வித்யா பாலன் கூறும்போது,

‘நேர்கொண்ட பார்வை படத்தில் கவுரவ வேடம் என்றாலும் நல்ல டீமுடன் பணியாற்றியது மறக்க முடியாது. அஜித், ரொம்பவும் எளிமையானவர். கபாலி வாய்ப்புதான் எனக்கு வந்தது. அந்த சமயத்தில் இந்தி படத்தில் பிசியாக இருந்ததால் நடிக்க முடியாமல் போனது. 



ஆரம்பத்தில் மாதவனுடன் ரன் படத்தில் நடிக்க என்னைத்தான் கேட்டனர். டெஸ்ட் ஷூட்டிற்கு பிறகு நிராகரிக்கப் பட்டேன். மனசெல்லாம் படத்திலும் அதேபோல் நிராகரிக்கப் பட்டபோது வருத்தப்பட்டேன். இதயமே உடைந்து போனது. பின்னர் இந்தி சினிமாவில் அறிமுகமாகி எனது கேரியர் மாறியது’ என்றார்.
Tags:    

Similar News