சினிமா
சிம்பு, டி.ராஜேந்தர்

சிம்புக்கு ஏற்ற பெண்ணை அத்திவரதர் தான் காட்ட வேண்டும் - டி.ராஜேந்தர்

Published On 2019-08-10 13:07 GMT   |   Update On 2019-08-10 13:07 GMT
சிம்புக்கு ஏற்ற பெண்ணை அத்திவரதர் தான் காட்ட வேண்டும் என்று டி.ராஜேந்தர் காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் சென்று வருகிறார்கள். தற்போது நின்ற கோலத்தில் காட்சியளிக்கும் அத்திவரதரை காண்பதற்காக அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்களும் சென்று வருகிறார்கள்.

இந்நிலையில், நடிகர், இயக்குனர், அரசியல் பிரமுகருமான டி.ராஜேந்தர் அத்திவரதரை தரிசனம் செய்ய சென்றிருக்கிறார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கும் போது, ‘அத்திவரதர் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். அதிர்ஷ்டம் கொடுக்க வேண்டும். மக்கள் அத்திவரதரை காண கஷ்டப்பட்டு போகவில்லை இஷ்டப்பட்டு போகிறார்கள். வெளிநாட்டில் இருக்கும் என் மகன் சிலம்பரசன் எனக்கு போன் செய்து அத்திவரதர் பெருமாளை தரிசனம் செய்து விட்டீர்களா? என கேட்டார்.



என்னுடைய வேண்டுதல் எல்லாம் சிலம்பரசனுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும். நான் எந்த பெண்ணை வேண்டுமென்றாலும் முடிவு செய்யலாம். ஆனால் அப்பெண் சிலம்பரசனுக்கு பிடித்த பெண்ணாகவும் அவர் மனதிற்கு ஏற்ற பெண்ணாகவும் அமைய வேண்டும். எனக்கு அதுதான் முக்கியம். அப்படிப்பட்ட ஒரு பெண்ணை சிலம்பரசனுக்கு கிடைக்க அத்திவரதர் தான் வழிகாட்டவேண்டும்’ என்றார்.
Tags:    

Similar News