சினிமா
சூர்யா, ஜோதிகா

முதல் நாளே நேர்கொண்ட பார்வை படத்தை பார்த்த சூர்யா-ஜோதிகா

Published On 2019-08-09 05:35 GMT   |   Update On 2019-08-09 05:35 GMT
திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை சூர்யா-ஜோதிகா முதல் நாளே பார்த்துள்ளனர்.
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘நேர்கொண்ட பார்வை’ நேற்று வெளியான இப்படத்தை பார்த்த அனைவரும் நல்ல விமர்சனங்களையே கொடுத்து வருகின்றனர். உலகம் முழுக்க இருக்கும் அஜித் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகிறார்கள். அஜித்தின் ரசிகர்கள் மட்டுமல்லாது, திரை பிரபலங்களும் படத்தை பாராட்டி வருகின்றனர். 



அந்த வகையில், நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் படத்தை முதல் நாளே பார்த்துள்ளனர். இப்படம் அவர்கள் இருவரையும் வெகுவாக கவர்ந்ததாம். படம் பார்த்து சந்தோஷமடைந்த சூர்யா, இயக்குனர் வினோத் மற்றும் நடிகர் அஜித் வீட்டிற்கு வாழ்த்து கூறி பூங்கொத்தை அனுப்பியதாக கூறப்படுகிறது.
Tags:    

Similar News