சினிமா
வெங்கட் பிரபு, சிம்பு

சிம்பு நீக்கம் குறித்து வெங்கட் பிரபு கருத்து

Published On 2019-08-09 03:45 GMT   |   Update On 2019-08-09 03:45 GMT
மாநாடு திரைப்படத்தில் இருந்து நடிகர் சிம்பு நீக்கம் செய்யப்பட்டது குறித்து அப்படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு கருத்து தெரிவித்துள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக இருந்த மாநாடு திரைப்படத்தில் இருந்து நடிகர் சிம்பு விடுவிக்கப்படுவதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார். மாநாடு படத்திற்கான கால்ஷீட் தருவதில் தாமதம் ஏற்பட்டு வருவதால், படம் எடுப்பதில் கால விரயம் ஏற்படுவதாக தெரிவித்த சுரேஷ் காமாட்சி, மாநாடு படத்திலிருந்து சிம்பு நீக்கப்படுவதாக தெரிவித்தார். 



இந்நிலையில் இது குறித்து படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் பதிவிட்டுள்ளதாவது:- ”நடிகர் சிம்புவுடன் பணியாற்ற முடியாமல் போனது துரதிர்ஷ்டவசமானது. அதே நேரத்தில் காலம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தயாரிப்பாளர் எடுத்துள்ள இந்த முடிவினை ஏற்றுக் கொள்கிறேன்”. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News