சினிமா
பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ்

பிரியங்கா சோப்ரா வாங்கும் புதிய வீட்டின் மதிப்பு இத்தனை கோடியா?

Published On 2019-08-09 02:08 GMT   |   Update On 2019-08-09 02:08 GMT
ரூ.50 கோடி மதிப்பிலான வீட்டை விற்றுவிட்டு, அதைவிட பிரம்மாண்டமான புதிய வீட்டை பிரியங்கா சோப்ரா விலைக்கு வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா அமெரிக்கா பாப் பாடகர் நிக் ஜோனசை கடந்த வருடம் திருமணம் செய்து லாஸ் ஏஞ்சல்சில் உள்ள பெவர்லி ஹில்ஸ் பகுதியில் உள்ள ஆடம்பர வீட்டில் குடியேறினார். இது நிக் ஜோனசுக்கு சொந்தமான வீடு. இதன் மதிப்பு ரூ.50 கோடி ஆகும். இந்த வீடு ஐந்து படுக்கை அறைகள், ஐந்து குளியல் அறைகள், ஒரு நீச்சல் குளம், இரவு விருந்து நிகழ்ச்சிக்கு தனி பகுதி என்று விசாலமாக இருந்தது. 

இப்போது அந்த வீட்டை விற்றுவிட்டனர். இதுவே பெரிய வீடுதான். ஆனாலும் இதை விட பெரிய வீட்டுக்கு மாறுவதற்காக விற்று இருக்கிறார்கள். அதே பெவர்லி ஹில்ஸ் பகுதியில் இன்னொரு புதிய வீட்டை விலைக்கு வாங்க முடிவு செய்து இருப்பதாக ஹாலிவுட் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு உள்ளன. புதிய வீட்டின் மதிப்பு ரூ.140 கோடி என்று கூறப்படுகிறது. 



தனது சகோதரர்களுடன் சேர்ந்து நிக் ஜோனஸ் ஹேப்பினஸ் பிகின் டூர் நிகழ்ச்சிக்கு திட்டமிட்டு உள்ளார். இந்த இசை சுற்றுலாவுக்காக நிக் ஜோனஸ் பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்ய வேண்டி உள்ளது. இதனால் புதிய வீட்டை வாங்கினாலும் அவர்கள் விருப்பத்துக் கேற்ப உள் அலங்கார வேலைப்பாடுகள் செய்ய தாமதம் ஆகும். எனவே அடுத்த வருடம் நிக் ஜோனஸ்-பிரியங்கா ஜோடி இந்த வீட்டுக்கு கிரகப்பிரவேசம் செய்ய திட்டமிட்டு உள்ளனர். 
Tags:    

Similar News