சினிமா
ரஜினிகாந்த்

எஜமான், முத்து, படையப்பா பாணியில் ரஜினியின் அடுத்த படம்

Published On 2019-08-08 14:48 GMT   |   Update On 2019-08-08 14:48 GMT
தர்பார் படத்தை அடுத்து ரஜினி நடிக்க உள்ள புதிய படம், எஜமான், முத்து, படையப்பா பாணியில் உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரஜினிகாந்த் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இது ரஜினியின் 167-வது படமாகும். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது. படத்தில் மும்பையில் வசிக்கும் போலீஸ் அதிகாரியாக ரஜினி நடிக்கிறார். அவருக்கு அதிரடி சண்டைக்காட்சிகள் அமைந்துள்ளன.

அரசியலில் இறங்கிய பின்னரும் நடிப்பேன் என்று கூறியுள்ள ரஜினிகாந்த் அடுத்து நடிக்கவுள்ள படம் பற்றிய பேச்சு சினிமா வட்டாரங்களில் பரபரப்பாக பரவி வருகிறது. சில மாதங்களுக்கு முன்னர் சிறுத்தை, வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் படங்களை இயக்கிய இயக்குனர் சிறுத்தை சிவா ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.

அவர் ரஜினியின் அடுத்தப் படத்தை இயக்குகிறாரா என்ற கேள்வி எழுந்தது. இதற்கு சிவா மறுப்பு தெரிவிக்கவில்லை. தற்போது வலம் வரும் தகவல்கள் அதை உறுதிபடுத்தும் விதமாக உள்ளது.



ரஜினியின் 168-வது படத்தை சிவா இயக்குவதாக கூறப்படுகிறது. 90களில் ரஜினிக்கு மிகப்பெரிய வெற்றி படங்களாக அமைந்த எஜமான், முத்து, படையப்பா ஆகிய படங்கள் கிராமப்புற பின்னணியில் அமைந்திருந்தன. வீரம், விஸ்வாசம் என கிராமப்புற பின்னணியில் மாஸ் ஹீரோக்களுக்கான கதையமைத்து வெற்றிப் படங்களை கொடுத்து வரும் சிவா, ரஜினிக்கும் அப்படி ஒரு திரைக்கதையை எழுதி உள்ளார்.

தர்பார் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்த உடனே இன்னும் சில மாதங்களில் இதன் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அனேகமாக ரஜினியின் பிறந்தநாள் அன்று இந்த படம் தொடங்கப்பட்டலாம். படத்தை அடுத்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
Tags:    

Similar News