சினிமா
அஜித், சாந்தனு

திரையரங்கு முன்பு அஜித் ரசிகர் தற்கொலை முயற்சி - சாந்தனு தகவல்

Published On 2019-08-08 11:12 GMT   |   Update On 2019-08-08 11:12 GMT
திரையரங்கு முன்பு அஜித் ரசிகர் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக நடிகர் சாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அஜித் குமார் நடிப்பில் நேர்கொண்ட பார்வை படம் இன்று வெளியானது. இந்த படத்துக்காக டிக்கெட் எடுக்க நடிகர் சாந்தனு நேற்று நள்ளிரவு 11.30 மணிக்கு சென்னையில் சத்யம் திரையரங்கத்துக்கு சென்றுள்ளார்.

அங்கு அஜித் ரசிகர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றதாக சாந்தனு தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். அவர் நள்ளிரவு 11.55 மணிக்கு இதை பகிர்ந்துள்ளார்.



அதில், சத்யம் திரை அரங்கில் தனக்கு அருகில் இருந்த நபர் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க தீப்பெட்டி தேடிக்கொண்டிருந்ததாக தெரிவித்துள்ளார்.

நேர்கொண்ட பார்வை படத்துக்கான டிக்கெட் பிரச்சினையில் இவ்வாறு அந்த நபர் செய்ததாகவும், அவரை போலீஸ் கைது செய்ததாகவும் சாந்தனு தெரிவித்துள்ளார். அஜித் மற்றும் மற்ற திரை நட்சத்திரங்கள் தங்கள் ரசிகர்கள் மேற்காணும் செயல்களில் ஈடுபடுவதை ஊக்குவிக்கக்கூடாது என்றும் சாந்தனு தனது டுவிட்டில் கேட்டுக்கொண்டுள்ளார்.
Tags:    

Similar News