சினிமா
கமல்ஹாசன்

மருதநாயகம் உருவாகும்- கமல்ஹாசன்

Published On 2019-08-06 06:35 GMT   |   Update On 2019-08-06 06:35 GMT
மருதநாயகம் படத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளை எடுத்துக் கொண்டிருப்பதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இதில் போட்டியாளர்களாக இருப்பவர்கள் கமல்ஹாசனிடம் பல்வேறு கேள்விகளை கேட்டனர். ஏற்கனவே தயாராகி கிடப்பில் போடப்பட்ட மருதநாயகம் படம் பற்றியும் கேள்வி எழுப்பினர். அவற்றுக்கு பதில் அளித்து கமல்ஹாசன் கூறியதாவது:-

“நடிகர் சங்கத்தில் பொறுப்பு வகிக்க ஆசை இல்லையா? என்று கேட்கிறீர்கள். நடிகர் சங்கத்தை பொறுத்தவரை நான் ஒரு அப்பா ஸ்தானத்தில் இருந்து வழி நடத்துகிறேன். எம்.ஜி.ஆருடன் ‘நாளை நமதே’ படத்தில் நடிக்க இருந்த வாய்ப்பை தவறவிட்டு விட்டேன். நாளை நமதே படத்தை என்னால் ‘ரீமேக்’ செய்ய இயலாது. அதனால் அந்த படத்தின் தலைப்பை மட்டும் வாங்கி வைத்து இருக்கிறேன்.



சிவாஜி நடித்துள்ள தேவர் மகன் படத்தை ரீமேக் செய்து அதில் சிவாஜிகணேசன் நடித்த வேடத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன். உலகின் தலை சிறந்த காதல் ராவணனின் காதல். பத்து தலைகள் இருந்தாலும் ராவணனின் காதல் ஒரு தலை காதல்தான். நடக்கவே நடக்காது என்று தெரிந்தும் ராவணன் காதலித்தார் என்றால் அவருக்கு எத்தனை அன்பும் வெறியும் இருந்திருக்க வேண்டும்.

மருதநாயகம் படத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளை எடுத்துக்கொண்டு இருக்கிறேன். குஷ்புவுடன் நடித்த படங்களில் மைக்கேல் மதன காமராஜன் எனக்கு பிடித்த படம். அந்த படங்களில் 4 கதாநாயகிகள் இருந்தனர். ஆனாலும் குஷ்பு உதவி இயக்குனராக பணியாற்றி கொண்டே அதில் நடித்தார்.”

இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.
Tags:    

Similar News