சினிமா
அஜித்

துப்பாக்கி சுடுதல் போட்டி - கோவையை அடுத்து மத்திய பிரதேசத்தில் கால் பதிக்கும் அஜித்

Published On 2019-08-03 06:58 GMT   |   Update On 2019-08-03 06:58 GMT
கோவையில் நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்துக் கொண்டு வெற்றி பெற்ற நடிகர் அஜித், மத்திய பிரதேசத்தில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
நடிகர் அஜித் நடிப்புத்துறை மட்டுமல்லாது கார் ரேஸ், போட்டோகிராபி, ஏரோ மாடலிங், சமையல் என பல்வேறு துறைகளிலும் தடம் பதித்து வருபவர். பல ஆண்டுகளாக ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படும் சிறிய ரக விமானங்கள் தயாரிப்பில் கவனம் செலுத்தி வந்த அவர், எம்.ஐ.டியை சேர்ந்த தக்ஷா எனும் மாணவர் குழுவுடன் சேர்ந்து சிறிய அளவிலான ஆளில்லா விமானம் தயாரிக்க வழிகாட்டியாக செயல்பட்டார்.

தற்போது துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆர்வம் காண்பித்து வருகிறார். தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்கம் சார்பாக கோவை காலவர் பயிற்சி மையத்தில் துப்பாக்கிச்சுடுதல் போட்டி நடைபெற்றது. இதில் அஜித் கலந்துக் கொண்டு வெற்றி பெற்றுள்ளார்.



இந்த வெற்றியின் மூலம் டிசம்பர் மாதம் மத்திய பிரதேசத்தில் உள்ள போபாலில் நடைபெறும் தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு அஜித் தகுதி பெற்றுள்ளார்.
Tags:    

Similar News