சினிமா
நடிகர் ஜெயம் ரவி

நம்பரில் நம்பிக்கை இல்லை - ஜெயம் ரவி

Published On 2019-08-02 15:13 GMT   |   Update On 2019-08-02 15:13 GMT
தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் ஜெயம் ரவி 25வது படத்தில் நடித்துவரும் நிலையில், நம்பர் மீது நம்பிக்கை என்று கூறியிருக்கிறார்.
ஜெயம் ரவி தனது 25-வது படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார். ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ரோமியோ ஜூலியட், போகன் ஆகிய படங்களை இயக்கியவர் லட்சுமணன். இவரது இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் மூலம் நிதி அகர்வால் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். டி.இமான் இசையமைக்கிறார். 

இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடைபெற்ற நிலையில் தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது. 25-வது படமாக உருவாவதால் ஏதேனும் சிறப்பான முக்கியத்துவம் இதில் இருக்குமா என்ற பேச்சு நிலவும் நிலையில் ஜெயம் ரவியே அதற்கு பதில் அளித்துள்ளார். 



“இது எனது 25-வது படம் என்று தெரியும். ஆனால், இந்த எண்களில் எனக்கு நம்பிக்கை இல்லை. மற்ற படங்களை போலவே இந்த படமும் எனக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய அனுபவத்தை தருகிறது. கிராமப்புறப் பின்னணியில் சமூகக் கருத்துகளை வலியுறுத்தும் படமாக இது இருக்கும்” என அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
Tags:    

Similar News