சினிமா
அபி சரவணன்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசாம் மக்களுக்கு உதவிய அபி சரவணன்

Published On 2019-08-02 13:44 GMT   |   Update On 2019-08-02 13:44 GMT
மழை வெள்ளத்தால் அதிக அளவு பாதிக்கப்பட்ட அசாம் மாநில மக்களுக்கு நடிகர் அபி சரவணன் உதவி செய்திருக்கிறார்.
பட்டதாரி என்கிற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் அபி சரவணன். இவர் நடிகராக மட்டுமல்லாமல் ஒரு சமூக ஆர்வலராக இயற்கை சீற்றம், தேசிய பேரிடர் சமயங்களில் மொழி மாநிலம் பாராமல் உதவிக்கரம் நீட்டி வருகிறார். 

தற்போது கடந்த 10 நாட்களுக்கும் மேலாக அசாமில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி செய்வதற்காக கடந்த ஒருவாரமாக அங்கேயே முகாமிட்டு நிவாரண பணிகளில் ஈடுபட்டிருக்கிறார் அபி சரவணன்.



மழையால் அதிக அளவு பாதிக்கப்பட்ட அசாம் மாநிலத்தின் ஐந்து மாவட்டங்களில், தனது நண்பர்களுடனும் மற்றும் அசாம் மாநில அதிகாரிகள் சிலர் பாதுகாப்பு உதவியுடனும் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரடியாகச் சென்று அரிசி மற்றும் உணவுப் பொருட்கள், துணிகள், மருந்து பொருட்கள், மற்றும் குடிநீர் ஆகியவற்றை தனது சொந்த செலவில் அபி சரவணன் வழங்கி இருக்கிறார்.
Tags:    

Similar News