சினிமா
இயக்குநர் சிவசக்தி

இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் விழா நடத்திய இயக்குநர்

Published On 2019-08-02 14:17 IST   |   Update On 2019-08-02 14:17:00 IST
கள்ளக்குறிச்சி அருகே மாத்தூர் கிராமத்தில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் இயக்குநர் ஒருவர் விழா நடத்தியுள்ளார்.
இயற்கை விவசாயத்தை பற்றி குத்தூசி என்ற திரைப்படத்தை எடுத்தவர் இயக்குநர் சிவசக்தி. இவர் தனது சொந்த ஊரான கள்ளக்குறிச்சி அருகே மாத்தூர் கிராமத்தில் இயற்கை விவசாயம் அறிமுக விழா நடத்தினார். இவ்விழாவில் நம்மாழ்வார் படத்தை திறந்துவைத்து இயற்கை விவசாயத்தின் சிறப்பு பற்றியும் சான்றோர்கள் பேசினார்கள். இந்த விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் விதைபந்தும், பள்ளிமாணவர்களுக்கு மரகன்றும் தந்தனர். 



இந்நிகழ்ச்சியில் 465 வகையான பாரம்பரிய நெல் கண்காட்சி வைத்தனர். பங்கேற்ற அனைவருக்கும் உணவாக பாரம்பரிய அரிசியான காட்டுயாணம் கஞ்சி, மாப்பிள்ளை சம்பா சாதம் வழங்கப்பட்டது. விழாவை குத்தூசி இயற்கை போற்றும் நண்பர்கள் மற்றும் பசுமை சிகரம் அறக்கட்டளையும், எழில் இயற்கை வேளாண் பண்ணையும் சேர்ந்து இவ்விழாவை நடத்தினார்கள் .

Similar News