சினிமா
தந்தை ஏ.ஆர்.ரஹ்மான் உடன் இசை பயணத்தை தொடங்கிய ஏ.ஆர்.அமீன்
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகனான ஏ.ஆர்.அமீன், தனது இசை பயணத்தை சுயாதீன பாடல் மூலம் தொடங்கியுள்ளார்.
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகனான ஏ.ஆர். அமீன், தமிழில் அவரது முதல் சுயாதீன பாடலான சகோவை வெளியிட்டுள்ளார். காதல் பற்றியும் நட்பைப் பற்றியும் பேசும் இப்பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்பாடலை விவேக் மற்றும் ஏ.டி.கே இணைந்து எழுதியுள்ளனர்.
இப்பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஏ.ஆர்.அமீன் தயாரித்துள்ளனர். இப்பாடலின் முழு வீடியோவை இயக்கி இருப்பது அமித் கிருஷ்ணன். இந்த வீடியோவில் அமீன் பாடுவது அனைவரின் உள்ளத்தையும் கொள்ளை கொள்ளும் விதமாக அமைந்திருக்கிறது.
இப்பாடலைப் பற்றி ஏ.ஆர்.ரஹ்மான் கூறுகையில், “அமீனின் இந்த முதல் பாடல் நிச்சயம் அவருக்கு சிறந்த பாடகர் எனும் அங்கீகாரத்தைப் பெற்றுத்தரும். மேலும் இனிவரும் அவரின் படைப்புகளும் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பினை உண்டாக்கும்” என கூறினார்.