சினிமா
அரவிந்த் சாமி

20 வருடங்களுக்குப் பிறகு தி லயன் கிங் படத்தில் இணைந்த அரவிந்த் சாமி

Published On 2019-06-29 05:29 GMT   |   Update On 2019-06-29 05:29 GMT
அதிநவீன தொழில்நுட்பங்கள் மூலம் 20 வருடங்களுக்குப் பின் வெளியாகும் ‘தி லயன் கிங்’ படத்தில் நடிகர் அரவிந்த் சாமி இணைந்துள்ளார்.
2016 ஆம் ஆண்டில் ‘தி ஜங்கிள் புக்’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த டிஸ்னி, தற்போது ‘தி லயன் கிங்’ படத்தை அதிநவீன தொழில்நுட்பங்கள் மூலம் ரசிகர்களுக்கு வழங்குகிறது. 

20 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான லயன் கிங் அனிமேஷன் படத்தின் தமிழ் பதிப்பில் முன்னணி கதாபாத்திரமான சிம்பாவுக்கு அரவிந்த் சாமி குரல் கொடுத்திருந்தார். இந்நிலையில், தற்போது  வெளியாகவுள்ள தி லயன் கிங் படத்தின் தமிழ் பதிப்பில் ஸ்கார் கதாபாத்திரத்திற்கு பின்னணி குரல் கொடுக்கிறார். 

இது குறித்து அரவிந்த்சாமி கூறும்போது, "20 ஆண்டுகளுக்கு முன்பு தி லயன் கிங்கில் சிம்பாவுக்கு டப்பிங் செய்தபோது ஒரு அனிமேஷன் படத்திற்கு டப்பிங் செய்வது சிறந்த கற்றல் அனுபவமாக இருந்தது. தி லயன் கிங்கின் புதிய பதிப்பில் ஒரு கதாபாத்திரத்திற்காக டப்பிங் செய்ய இந்த முறை என்னை அணுகியபோது நான் ஸ்கார் கதாபாத்திரத்திற்கு டப்பிங் செய்ய விரும்பினேன். ஏனெனில் அந்த கதாபாத்திரம் மிகவும் சுவாரஸ்யமான மற்றும் பல பரிமாணங்களை கொண்டது. இது தொழில்முறை அனுபவத்தை வளப்படுத்தியது" என்றார்.



'அயர்ன் மேன்' மற்றும் 'தி ஜங்கிள் புக்' புகழ் இயக்குனர் ஜான் ஃபேவ்ரூ இயக்கத்தில் உருவாகியுள்ள, 'தி லயன் கிங்' சமீப காலங்களில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாகும். “தி லயன் கிங்” வரும் ஜூலை 19, 2019 அன்று தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியிடப்படுகிறது.

இம்முறை இதில் இடம்பெறும் சிம்பா கதாபாத்திரத்திற்கு நடிகர் சித்தார்த் குரல் கொடுக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News