சினிமா

கிரேசி மோகனுக்கு பதிலாக நாடகம் நடத்தும் கமல்

Published On 2019-06-26 06:14 GMT   |   Update On 2019-06-26 06:14 GMT
மறைந்த நாடக கலைஞர், வசனம் மற்றும் திரைக்கதை ஆசிரியர் கிரேசி மோகன் நடத்தி வந்த நாடகத்தை கமல் நடத்த இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாடக கலைஞர், வசனம் மற்றும் திரைக்கதை ஆசிரியர், நடிகர், ஓவியர், கவிஞர் எனப் பல பரிமாணங்களில் மக்களை மகிழ்வித்த கிரேசி மோகன் கடந்த 10-ந்தேதி காலமானார்.

சென்னை நகர சபாக்களின் கூட்டமைப்பும் தமிழ்நாடு நாடகத் தயாரிப்பாளர்கள் சங்கமும் இணைந்து கிரேசி மோகனுக்கான நினைவேந்தல் கூட்டத்தை நடத்தினார்கள். இதில் கிரேசி மோகனுடன் திரைத்துறை, நாடகத்துறையில் பணிபுரிந்தவர்கள் கலந்துகொண்டு அவருடனான அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

கிரேசி மோகனின் தம்பி மாது பாலாஜி பேசும்போது, ‘அவன் இறந்து ஒரு ரெண்டு மூணு நாள் இருக்கும். கமல் சார் கால் பண்ணினார். ‘இனி அடுத்து என்ன பண்ணப்போறீங்க?’ன்னு கேட்டார். அதான் தெரியல சார், என்று சொன்னேன்.



உடனே அவர், அப்படியெல்லாம் விடக்கூடாது. கிரேசி கிரியே‌ஷன்ஸ் தொடர்ந்து மோகனோட நாடகத்தையெல்லாம் போடணும். இதுமட்டுமல்லாம அவர் எழுதி இன்னும் நாடகமாக்கப்படாமல் இருக்குறதையும் உலகத்துக்கு எடுத்துட்டுப் போகணும். உடனே சபா புக்பண்ணுங்க. அவரோட கிரேசி ப்ரிமியர் லீக்கோட 100வது நாள் ஷோவை நானும் மவுலி சாரும் நடத்திக் கொடுக்குறோம்.

இனிமேல் கிரேசி மோகன் இருந்த இடத்துல உங்களுக்கு நான் இருப்பேன்னு சொல்லி நம்பிக்கை கொடுத்தார் என கண்களில் நீர் வழிய கூறினார்.
Tags:    

Similar News