சினிமா

ஜெயம் ரவியின் அரசியல் கொள்கை

Published On 2019-05-12 13:39 GMT   |   Update On 2019-05-12 13:39 GMT
லக்‌ஷ்மண் இயக்கத்தில் தன்னுடைய 25வது படத்தில் நடிக்கும் ஜெயம்ரவி தனக்கு அரசியல் கொள்கை இருப்பதாக கூறியிருக்கிறார்.
ஜெயம் ரவி 25-வது படத்தை தொடுகிறார். அந்த படம் பற்றி அவர் கூறியிருப்பதாவது:-

‘என்னுடைய 25வது படத்தை லக்‌ஷ்மண் இயக்குறார். நான் ரொம்ப நாளா பண்ணணும்னு நினைச்ச வி‌ஷயத்தைப் படமா பண்ணப்போறோம். விவசாயம் சார்ந்த படமா, மண்ணின் மைந்தர்கள் பற்றிய படமா இது இருக்கும். அண்ணனுக்கும் இந்தப் படம் மேல பெரிய நம்பிக்கை இருக்கு. அதனால, இதை முடிச்சுட்டு வா, நாம எப்போவேணா `தனி ஒருவன் 2’ பண்ணலாம்னு சொல்லியிருக்கார். என்னை எனக்குக் காட்டிய படங்களில், `பேராண்மை’யும் ஒண்ணு.



இந்தப் படத்துல நடிச்சது எனக்குப் பெருமை. மத்தபடி, நானும் ஒரு அரசியலை பாலோ பண்றேன். அந்த அரசியலுக்குள்ள தான் இருக்கேன். அதுக்காகத்தான் தேர்தல்ல ஓட்டு போடுறேன். நான் எந்தக் கட்சியிலும் இல்லை; தனிப்பட்ட நபர் யாரையும் ஆதரிக்கவில்லை’ இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News