சினிமா
தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு ஒத்திவைப்பு
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பதாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். #Vishal #ProducerCouncil
தயாரிப்பாளர் சங்க தலைவராக விஷால் செயல்பட்டு வருகிறார். இவர் தலைமையில் பொதுக்குழு கூட்டம் 3.3.2019 அன்று நடைபெற இருந்தது. தற்போது பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பதாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள்.
அந்த அறிக்கையில், ‘தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் சார்பாக 3.3.2019 அன்று சென்னை ராமாபுரத்தில் உள்ள ஜீவன் ஜோதி மஹாலில் காலை 10.30 மணிக்கு நடக்கவிருந்த ஆண்டுப் பொதுக்குழு கூட்டம் தற்போது சென்னை உயர்நீதி மன்றத்தால் நியமிக்கப்பட்ட ஓய்வுப் பெற்ற நீதியரசர் கே.என்.பாஷா அவர்களின் ஆலோசனையின்படி ஒத்தி வைக்கப்படுகிறது. மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என்பதை உறுப்பினர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்’ இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.