சினிமா

பா.இரஞ்சித்தின் அடுத்த படம் இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு

Published On 2018-12-09 10:27 GMT   |   Update On 2018-12-09 10:27 GMT
நீலம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பா.இரஞ்சித் தயாரிப்பில் அடுத்ததாக உருவாகவிருக்கும் படத்திற்கு `இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில் அட்டகத்தி தினேஷ் நாயகனாக நடிக்கிறார். #Gundu #Dinesh
`பரியேறும் பெருமாள்' படத்தை தொடர்ந்து நீலம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பா.இரஞ்சித் அடுத்ததாக தயாரிக்கவிருக்கும் படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது.

`இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் அட்டத்தி தினேஷ் நாயகனாக நடிக்கிறார். நாயகிகளாக அனேகா, ரித்விகா ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் லிஜீஷ், முனீஸ்காந்த், ரமேஷ் திலக் ஆகியோர் நடிக்கிறார்கள்.

மெட்ராஸ், கபாலி, காலா உள்ளிட்ட படங்களில் இயக்குநர் பா.இரஞ்சித்திடம் உதவியாளராக பணியாற்றிய அதியன் ஆதிரை இயக்குகிறார்.


இசையமைப்பாளராக தென்மா அறிமுகமாகிறார். கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்ய, செல்வா ஆர்.கே படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கின்றனர். தா.ராமலிங்கம் கலை பணிகளை கவனிக்க, உமாதேவி, அறிவு, தனிக்கொடி, தங்கவேலு ஆகியோர் பாடல்களை எழுதுகிறார்கள். #Irandamulagaporinkadaisi_GUNDU #Gundu #Dinesh

Tags:    

Similar News