சினிமா

விக்ரமின் அடுத்த படத்தை இயக்கும் அஜய் ஞானமுத்து

Published On 2018-12-08 10:05 GMT   |   Update On 2018-12-08 10:05 GMT
இமைக்கா நொடிகள் படத்தை தொடர்ந்து அஜய் ஞானமுத்து அடுத்ததாக இயக்கும் ஆக்‌ஷன் த்ரில்லர் படத்தில் விக்ரம் நாயகனாக நடிக்க இருக்கிறார். #Vikram #AjayGnanamuthu
திரில்லர் படங்கள் இயக்குவது இயக்குனர் அஜய் ஞானமுத்துவின் பாணி. இவரது முதல் படமான டிமாண்டி காலனி திரைப்படம் ஹாரர் திரில்லர் பாணியில் வெளியாகி கவனம் பெற்றது. சில மாதங்களுக்கு முன் நயன்தாரா முதன்மை கதாபாத்திரம் ஏற்று நடித்த இமைக்கா நொடிகள் கிரைம் திரில்லர் பாணியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. அனுராக் காஷ்யப், அதர்வா, ராஷி கண்ணா, விஜய் சேதுபதி அந்தப் படத்தில் நடித்திருந்தனர். 

இந்த நிலையில், அஜய் ஞானமுத்து இயக்கும் அடுத்த படம் ஆக்‌‌ஷன் திரில்லர் பாணியில் உருவாக உள்ளது. இந்தப் படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடிக்க உள்ளார். விக்ரம் தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் `கடாரம் கொண்டான்' படத்தில் நடித்து வருகிறார். ராஜேஷ்.எம்.செல்வா இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்று வருகிறது. 



இந்தப் படத்தை தொடர்ந்து விக்ரம் மலையாளத்தில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் `மகாவீர் கர்ணா' படத்தில் நடிக்க இருக்கிறார். அதன் பின் அவர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். 

டிமாண்டி காலனி படம் வெளிவந்த பின்பு 2016-ம் ஆண்டிலேயே அஜய்-விக்ரம் கூட்டணியில் புதிய படம் உருவாக இருந்தது. ஆனால் அப்போது அது கைகூடவில்லை. இருவரும் வெவ்வேறு படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினர். தற்போது இரண்டு ஆண்டுகளுக்குப் பின் இருவரும் இணையவிருக்கின்றனர். அடுத்த ஆண்டு இதன் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அ]றிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. #Vikram #AjayGnanamuthu

Tags:    

Similar News