சினிமா

சிம்புவின் அடுத்த படம் - மீண்டும் இணைந்த வெற்றிக்கூட்டணி

Published On 2018-10-18 06:09 GMT   |   Update On 2018-10-18 06:09 GMT
`விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தின் இரண்டாம் பாகத்தின் மூலம் கவுதம்மேனன் - சிம்பு - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கிறது. #GVMSTRARRNxT #STR
`விண்ணைத்தாண்டி வருவாயா', அச்சம் என்பது மடமையடா படங்களை தொடர்ந்து கவுதம் மேனன் - சிம்பு மூன்றாவது முறையாக இணைவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார்கள்.

அந்த படம் `விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தின் இரண்டாம் பாகம் என்றும் கூறப்பட்டது. இந்தப்படத்தில் நடிக்க முதலில் மாதவனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், முதல் பாகத்தில் நடித்த சிம்புவே நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இந்த கூட்டணியில் ஏ.ஆர்.ரஹ்மானும் இணைந்திருக்கிறார். இதன் மூலம் மூன்றாவது முறையாக இந்த வெற்றிக் கூட்டணி இணைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.



சிம்பு தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் ரீமேக் படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த இரு படங்களை முடித்த பிறகு கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #GVMSTRARRNxT #STR #GauthamMenon #ARRahman #VTV2

Tags:    

Similar News