சினிமா

பேயாக மிரட்ட வரும் மௌனிகா

Published On 2018-07-15 11:02 GMT   |   Update On 2018-07-15 11:02 GMT
ரூபேஷ், அர்ச்சனா சிங் நடிப்பில் எஸ்.வி.சம்பத் குமார் இயக்கி தயாரித்திருக்கும் ‘மௌனிகா’ திரைப்படம் திகிலூட்டும் பேய் படமாக உருவாகியுள்ளது. #Mounika
ஸ்ரீவாரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் முற்றிலும் புதுமுக கலைஞர்கள் பணியாற்றும் ‘மௌனிகா’ என்ற திகிலூட்டும் பேய் படத்தை தயாரித்து வருகிறது.

இந்தப் படத்தின் அனைத்து கட்ட படப்பிடிப்புகளும் கோத்தகிரி தேயிலை தோட்டம், அரவேனு கொச்சின், ஆலப்புழா, கோவை ஆகிய முக்கியமான பகுதிகளில் நடந்து வருகிறது. 

ஒரு கோடீஸ்வரியின் மகன் தனது தேயிலை தோட்டத்தில் பணியாற்றுபவரின் மகளை உயிருக்குயிராக காதலிக்கிறான். அவனது காதலை அவளும் ஏற்று கொள்கிறாள்.

இவர்களின் காதல் இரு வீட்டார்க்கும் தெரிந்து விடுகிறது. ஒருநாள் திடீரென்று அந்தப் பெண் இறந்து போய்விடுகிறாள். அவளது மரணத்திற்கு காரணம் அவளது காதலனா? இல்லை அவர்களது காதலை பிடிக்காதவர்களா? கொலையாளியை கண்டுபிடிக்க காவல்துறை போலீஸ் அதிகாரி இருவரை ஊருக்குள் அனுப்புகிறது. இறந்து போன பெண்ணும் பேயாகி தனது இறப்பிற்கு காரண மாணவர்களை பழிவாங்க ஊருக்குள் வருகிறாள். இருவரும் ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கிறார்கள். வென்றது யார்? காவல்துறை அதிகாரியா? பேயாக வந்திருக்கும் இறந்துபோன பெண்ணா? இதன் விளக்கம் தான் ‘மௌனிகா’ திகிலூட்டும் பேய் படத்தின் கதையாகும்.



இதில் கதாநாயகனாக ரூபேஷ் நடிக்கிறார். அர்ச்சனா சிங் பேய் வேடத்தை ஏற்று கதாநாயகியாக நடிக்கிறார். பேமிலி டாக்டராக லிவிங்ஸ்டன் நடிக்கிறார். தேவி ஸ்ரீ பிரியா, மாணிக்கவாசகம், ராஜ்மோகன், பஞ்சலிங்கம், எம்.ஆர்.விஸ்வா, மணீஸ், நடராஜ், சிவராம் சிங், ஹரிபிரசாத், கருப்பசாமி, இவர்களுடன் இந்தப் படத்தின் இயக்குனரும், தயாரிப்பாளருமான எஸ்.வி.சம்பத் குமார் துப்பறியும் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். டிடெக்டிவ் ஏஜென்ஸியாக ஓம் சக்தி மனோகரன் நடிக்கிறார்.
Tags:    

Similar News