சினிமா

உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் பார்த்திபன் காதல்

Published On 2018-07-02 13:18 GMT   |   Update On 2018-07-02 13:18 GMT
வள்ளி முத்து இயக்கத்தில் யோகி, வர்ஷிதா நடிக்கும் பார்த்திபன் காதல் திரைப்படம் உண்மை சம்பவத்தை மையப்படுத்தி உருவாக இருக்கிறது. #ParthibanKadhal
எஸ் சினிமா கம்பெனி என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் படம் ‘பார்த்திபன் காதல்’. இந்த படத்தில் யோகி கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக வர்ஷிதா அறிமுகமாகிறார். மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

தங்கையா மாடசாமி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு பில்லா இசையமைக்கிறார். வள்ளி முத்து கதை எழுதி இயக்குகிறார். இவர் ட்ரிபிள் வி ரெக்கார்ட்ஸ் தயாரித்த என்னமோ நடக்குது, அச்சமின்றி போன்ற படங்களை இயக்கிய பி.ராஜபாண்டியிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.

படம் பற்றி இயக்குனர் வள்ளிமுத்து கூறும்போது, ‘உண்மை சம்பவத்தை மையப்படுத்தி புதிய களத்தில் இளமை கொஞ்சும் காதல் கதையாக உருவாக இருக்கிறது. அறிமுக நாயகன் யோகி ஓவிய கல்லூரி மாணவனாக நடிக்கிறார். இளம் கதாநாயகி வர்ஷிதா கிராமத்து கல்லூரி மாணவியாக நடிக்கிறார்.



சமீப கலாமாக தமிழ் சினிமாவில் காமெடி பேய் படங்களும், ஆக்ஷன் படங்களும் வந்து கொண்டிருக்கும் இந்த சூழலில் ‘பார்த்திபன் காதல்’ ஒரு முழுமையான காதல் கதையாக உருவாகிறது. கும்பகோணம், ராஜபாளையம், தென்காசி போன்ற இடங்களில் விரைவில் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது’ என்றார்.
Tags:    

Similar News