சினிமா

ரஜினியுடன் நடித்ததை இன்னும் நம்ப முடியவில்லை - ஈஸ்வரி ராவ்

Published On 2018-05-28 17:46 IST   |   Update On 2018-05-28 17:46:00 IST
பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருக்கும் காலா படத்தில் ரஜினியுடன் நடித்ததை இன்னும் நம்ப முடியவில்லை என்று நடிகை ஈஸ்வரி ராவ் கூறியிருக்கிறார். #Kaala
ரஜினிக்கு ஜோடியாக காலா படம் மூலம் மீண்டும் நடிக்க வந்து இருக்கிறார் ஈஸ்வரிராவ். காலா படம் பற்றி ஈஸ்வரி ராவ் கூறும்போது ‘இதில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை.

ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்று முன்னணி கதாநாயகிகள் எல்லோரும் காத்துக்கொண்டிருக்க எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. ரஞ்சித் அழைத்து தேர்வு வைத்தார். ஆனால் ரஜினி படம் என்பதை மட்டும் ரகசியமாக வைத்திருந்தார். என்னுடைய காட்சிகள் பெரும்பாலும் தாராவியில் படமாக்கப்பட்டன.

படத்தில் நான் நிறைய நகை அணிந்து இருப்பேன். 25 ஆண்டுகளாக சினிமாவில் இருந்தாலும் நான் யாரிடமும் சென்று வாய்ப்பு கேட்டது இல்லை. காலா படத்திற்கு பிறகும் இதுவரை எந்த படமும் ஒப்பந்தமாகவில்லை. நல்ல வேடங்களுக்காக காத்திருக்கிறேன்’ என்றார்.
Tags:    

Similar News