சினிமா

பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்ற ரம்யா

Published On 2017-04-03 05:04 GMT   |   Update On 2017-04-03 05:04 GMT
மாவட்ட அளவிளான பளுதூக்கும் போட்டியில் தொகுப்பாளினி ரம்யா சுப்ரமணியன் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். இதுகுறித்த முழு தகவலை கீழே பார்ப்போம்.
பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினி ரம்யா சுப்ரமணியன். தொகுப்பாளினி, நடிகை என்ற அடையாளங்கள் ரம்யாவிற்கு ஒருபுறம் இருக்க, தற்போது பளு தூக்கும் போட்டியிலும் தனக்கென ஒரு அடையாளத்தை பதித்து இருக்கிறார்.

சென்னையில் நேற்று நடைபெற்ற மாவட்ட அளவிளான பளுதூக்கும் போட்டியில் 80 கிலோ எடை பிரிவில் முதலிடத்தை பிடித்து தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். இதையடுத்து, பதக்கத்துடன் தான் நிற்பது போன்ற புகைப்படத்தை அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு, பீஸ்ட் மோடில் செயல்பட்டு தங்கப் பதக்கத்தை வென்றுள்ளேன் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.



முன்னதாக, மாநில பளு தூக்கும் போட்டியில் வெண்கல பதக்கத்தை வென்றதன் மூலம் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க ரம்யா தகுதி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க ரம்யா தீவிர பயிற்சி எடுத்து வருகிறார். 

Similar News