சினிமா

ஆண்டவன் கட்டளையை முடித்த விஜய் சேதுபதி

Published On 2016-07-27 10:22 GMT   |   Update On 2016-07-27 10:22 GMT
விஜய் சேதுபதி நடிப்பில் உருவான 'ஆண்டவன் கட்டளை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளது. அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ரித்திகா சிங் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஆண்டவன் கட்டளை'. இதற்கு முன் மணிகண்டன் இயக்கத்தில் வெளியான 'காக்கா முட்டை'  ஏராளமான விருதுகளை வென்றதுடன் வசூலிலும் சாதனை படைத்தது.

இதனால் 'ஆண்டவன் கட்டளை' திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது இப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவுக்கு வந்திருக்கிறது. தொடர்ந்து படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை விரைந்து முடித்திட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். பாஸ்போர்ட் பிரச்சினைகளை மையமாகக்கொண்டு இப்படத்தின் கதையை மணிகண்டன் உருவாக்கியிருக்கிறார்.

இப்படத்திற்கு கே இசையமைத்திருக்கிறார். கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் அன்புச்செழியன் இப்படத்தை தயாரிக்கிறார். படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதையடுத்து அடுத்தக்கட்டமாக இறுதிக்கட்ட பணிகளை தொடங்கவிருக்கின்றனர். விரைவில், இப்படத்தின் ஆடியோவை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Similar News