சினிமா
மாறுபட்ட வேடங்களில் ரஜினி-சிவகுமார் இணைந்து நடித்த புவனா ஒரு கேள்விக்குறி
ரஜினிகாந்த்துடன் சிவகுமார் இணைந்து நடித்த "புவனா ஒரு கேள்விக்குறி'', மகத்தான வெற்றிப்படமாக அமைந்தது.
ரஜினிகாந்த்துடன் சிவகுமார் இணைந்து நடித்த "புவனா ஒரு கேள்விக்குறி'', மகத்தான வெற்றிப்படமாக அமைந்தது.
"பத்ரகாளி'' படத்தின் கதாசிரியரான "மகரிஷி''தான், இந்தப் படத்திற்கும் கதை ஆசிரியர். பஞ்சு அருணாசலம் வசனம் எழுதினார். இளையராஜா இசை அமைக்க, எஸ்.பி.முத்துராமன் டைரக்ட் செய்தார்.
இந்தப் படத்தில் ஒரு விசேஷம் என்னவென்றால், அதுவரை நல்லவராகவே நடித்து வந்த சிவகுமார், பெண்களை ஏமாற்றிக் கெடுக்கும் "ஆன்டி ஹீரோ''வாக இதில் நடித்தார். வில்லன் கேரக்டர்களில் நடித்து வந்த ரஜினிகாந்த், தோற்றத்தால் முரடராகவும், உள்ளத்தால் நல்லவராகவும் நடித்தார். சுமித்ரா, கதாநாயகி. சிவகுமாரால் ஏமாற்றப்படும் அவரை, ரஜினி காப்பாற்றி ஆதரிப்பார். 1977 செப்டம்பர் 2-ந்தேதி இப்படம் வெளிவந்தது.
ஆழமான கதை. நடிகர்களின் மாறுபட்ட நடிப்பு. இனிய பாடல்கள். எல்லாமாகச் சேர்ந்து, படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. குறிப்பாக, ரஜினியின் திரை உலக வாழ்க்கையில், முக்கிய திருப்பத்தை ஏற்படுத்திய படம், "புவனா ஒரு கேள்விக்குறி.'' இந்தப் படத்தில் சேர்ந்து நடித்ததன் மூலம், சிவகுமாரும், ரஜினிகாந்த்தும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள்.
ரஜினியுடன் ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி கேட்டதற்கு, சிவகுமார் கூறியதாவது:-
"நாவலாசிரியர் மகரிஷி எழுதிய `புவனா ஒரு கேள்விக்குறி' நாவலில், நல்லவன் போல் தோற்றமுள்ள பெண் பித்தன், வில்லன் போல் தோற்றமுடைய நல்லவன் என இரண்டும் வலுவான பாத்திரங்கள்.
இப்படத்துக்கு திரைக்கதை- வசனம் எழுதிக் கொண்டிருந்த நண்பர் பஞ்சு அருணாசலத்தைச் சந்தித்து, "எப்பப் பார்த்தாலும் யோக்கியனா, சாதுவா வேஷம் போடறதைவிட, ஒரு மாற்றத்துக்கு இதுல வர்ற பெண் பித்தன் நாகராஜன் வேஷத்தை நான் ஏற்று நடிக்கிறேன்'' என்றேன். மற்றொரு பாத்திரமான சம்பத் வேடம் ரஜினிக்குத் தரப்பட்டது.
எங்கள் இரண்டு பேருடைய தோற்றம், நாவலாசிரியரின் கற்பனைக்கேற்ப இயல்பாய் அமைந்ததுதான் அப்படத்தின் வெற்றிக்கு அடிப்படைக் காரணம். சம்பத் வேடமேற்ற ரஜினிக்கு நல்ல பெயர் கிடைத்தது. புகழ் ஏணியில் மளமளவென்று நாலு படி ஏறிவிட்டார்.
"சார்! அநியாயமா ரஜினிகாந்த்துக்கு அந்த வேஷத்தை விட்டுக்கொடுத்து, அவரைத் தூக்கி விட்டுட்டீங்களே'' என்று சில சினிமா உலக நண்பர்களும், ரசிகர்களும் என்னிடம் அங்கலாய்த்தனர்.
அவர்களின் அறியாமையை நினைத்து மனதுக்குள் சிரித்துக்கொண்டேன். "ஒரு மனிதன் எவ்வளவு உயர வேண்டும்; எப்படியெல்லாம் வாழவேண்டும் என்பது இறைவனால் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டவை. என்னதான் கடுமையாக உழைத்தாலும், நமக்கு என்ன விதிக்கப்பட்டதோ அதுதான் நடக்கும். ரஜினிகாந்த்துக்குப் புகழ் கூடியே ஆகவேண்டும் என்று எழுதப்பட்டிருக்கிறபோது, யார் தடுத்தாலும், எவர் பொறாமைப்பட்டாலும் அவர் உயர்வைத் தடுக்க முடியாது'' என்றேன்.
அதிர்ஷ்டம் வாயிற்கதவைத் திறந்து, ஆரத்தி எடுத்து அவரை வரவேற்ற காலகட்டம் அது!
ரஜினியின் மனக்கு 1982-ல் `அக்னி சாட்சி' படத்துக்காக ரஜினி வீட்டில் ஒரு காட்சியைப் படமாக்கினார் இயக்குனர் கே.பாலசந்தர். அமைதியான சூழலில், பெரும் புள்ளிகள் குடியிருக்கும் பகுதியில் அழகாக, விசாலமாக இருந்தது அவர் வீடு.
படப்பிடிப்பு முடிந்ததும், என்னை ரஜினி தனியே அவர் ரூமுக்கு அழைத்துச் சென்றார். ரஜினியின் வளர்ச்சி, வாழ்வு பார்த்துப் பூரித்துப் போயிருந்தேன்.
"ரஜினி! இப்படி உங்களைப் பார்க்கறப்போ எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கு. உங்க வளர்ச்சியைப் பார்த்துப் பெத்தவங்க பூரிச்சுப் போயிருப்பாங்க இல்லையா?'' என்று கேட்டேன்.
"என்ன வளர்ச்சியடைஞ்சு, எவ்வளவு பெயர் வாங்கி என்ன சார் பிரயோஜனம்?'' என்றார், ரஜினி.
"ஏன்! இப்ப உங்களுக்கு என்ன குறை?''
"சின்ன வயசில நான் எவ்வளவு முரடனா இருந்தாலும், எவ்வளவு குறும்பு பண்ணினாலும் என்னைத் தட்டிக் கொடுத்துப் பெருமைப்பட்டவர் எங்க அப்பாதான். நான் அப்பாவோட செல்லம். ஆடம்பரமான இந்த வீட்டை வாங்கினதும், எங்கப்பா ஞாபகம் வந்திடுச்சு. `உங்க புள்ளே இப்போ எவ்வளவு பாப்புலர் ஆயிட்டான். எவ்வளவு அழகா வீடு வாங்கியிருக்கான் பாருங்கப்பா'ன்னு அவரைக் கூட்டி வந்து காட்டறத்துக்காகப் பெங்களூர் பறந்தேன்'' என்று கூறிய ரஜினி, சில நிமிடங்கள் மவுனமாக இருந்தார்.
"ஏன் ரஜினி! அப்பாவுக்கு என்ன ஆச்சு?'' என்று நான் கேட்டேன்.
"நான் அவரைப் போய்ப்பார்க்கறதுக்குக் கொஞ்ச நாள் முன்னாடிதான் அவர் தன்னோட கண் பார்வையை இழந்திட்டார்...''
கண்கலங்க, துக்கம் தொண்டையை அடைக்க அவர் இதைச் சொன்னபோது, சில நொடிகள் அதிர்ந்து விட்டேன்.
நினைப்பதெல்லாம் நடந்து, நிறைவாக வாழ்ந்து விட்டவர் எவருமே இல்லையோ?
இன்று இமயம்போல் வளர்ந்து பல கோடிகளைப்பார்த்து, கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயத்தில் குடியிருந்த போதிலும் ரஜினியின் எளிமையும், மனதில் பட்டதை மறைக்காமல் சொல்லும் குணமும் எனக்கு ரொம்பவும் பிடித்தவை.''
இவ்வாறு கூறினார், சிவகுமார்.
"பத்ரகாளி'' படத்தின் கதாசிரியரான "மகரிஷி''தான், இந்தப் படத்திற்கும் கதை ஆசிரியர். பஞ்சு அருணாசலம் வசனம் எழுதினார். இளையராஜா இசை அமைக்க, எஸ்.பி.முத்துராமன் டைரக்ட் செய்தார்.
இந்தப் படத்தில் ஒரு விசேஷம் என்னவென்றால், அதுவரை நல்லவராகவே நடித்து வந்த சிவகுமார், பெண்களை ஏமாற்றிக் கெடுக்கும் "ஆன்டி ஹீரோ''வாக இதில் நடித்தார். வில்லன் கேரக்டர்களில் நடித்து வந்த ரஜினிகாந்த், தோற்றத்தால் முரடராகவும், உள்ளத்தால் நல்லவராகவும் நடித்தார். சுமித்ரா, கதாநாயகி. சிவகுமாரால் ஏமாற்றப்படும் அவரை, ரஜினி காப்பாற்றி ஆதரிப்பார். 1977 செப்டம்பர் 2-ந்தேதி இப்படம் வெளிவந்தது.
ஆழமான கதை. நடிகர்களின் மாறுபட்ட நடிப்பு. இனிய பாடல்கள். எல்லாமாகச் சேர்ந்து, படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. குறிப்பாக, ரஜினியின் திரை உலக வாழ்க்கையில், முக்கிய திருப்பத்தை ஏற்படுத்திய படம், "புவனா ஒரு கேள்விக்குறி.'' இந்தப் படத்தில் சேர்ந்து நடித்ததன் மூலம், சிவகுமாரும், ரஜினிகாந்த்தும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள்.
ரஜினியுடன் ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி கேட்டதற்கு, சிவகுமார் கூறியதாவது:-
"நாவலாசிரியர் மகரிஷி எழுதிய `புவனா ஒரு கேள்விக்குறி' நாவலில், நல்லவன் போல் தோற்றமுள்ள பெண் பித்தன், வில்லன் போல் தோற்றமுடைய நல்லவன் என இரண்டும் வலுவான பாத்திரங்கள்.
இப்படத்துக்கு திரைக்கதை- வசனம் எழுதிக் கொண்டிருந்த நண்பர் பஞ்சு அருணாசலத்தைச் சந்தித்து, "எப்பப் பார்த்தாலும் யோக்கியனா, சாதுவா வேஷம் போடறதைவிட, ஒரு மாற்றத்துக்கு இதுல வர்ற பெண் பித்தன் நாகராஜன் வேஷத்தை நான் ஏற்று நடிக்கிறேன்'' என்றேன். மற்றொரு பாத்திரமான சம்பத் வேடம் ரஜினிக்குத் தரப்பட்டது.
எங்கள் இரண்டு பேருடைய தோற்றம், நாவலாசிரியரின் கற்பனைக்கேற்ப இயல்பாய் அமைந்ததுதான் அப்படத்தின் வெற்றிக்கு அடிப்படைக் காரணம். சம்பத் வேடமேற்ற ரஜினிக்கு நல்ல பெயர் கிடைத்தது. புகழ் ஏணியில் மளமளவென்று நாலு படி ஏறிவிட்டார்.
"சார்! அநியாயமா ரஜினிகாந்த்துக்கு அந்த வேஷத்தை விட்டுக்கொடுத்து, அவரைத் தூக்கி விட்டுட்டீங்களே'' என்று சில சினிமா உலக நண்பர்களும், ரசிகர்களும் என்னிடம் அங்கலாய்த்தனர்.
அவர்களின் அறியாமையை நினைத்து மனதுக்குள் சிரித்துக்கொண்டேன். "ஒரு மனிதன் எவ்வளவு உயர வேண்டும்; எப்படியெல்லாம் வாழவேண்டும் என்பது இறைவனால் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டவை. என்னதான் கடுமையாக உழைத்தாலும், நமக்கு என்ன விதிக்கப்பட்டதோ அதுதான் நடக்கும். ரஜினிகாந்த்துக்குப் புகழ் கூடியே ஆகவேண்டும் என்று எழுதப்பட்டிருக்கிறபோது, யார் தடுத்தாலும், எவர் பொறாமைப்பட்டாலும் அவர் உயர்வைத் தடுக்க முடியாது'' என்றேன்.
அதிர்ஷ்டம் வாயிற்கதவைத் திறந்து, ஆரத்தி எடுத்து அவரை வரவேற்ற காலகட்டம் அது!
ரஜினியின் மனக்கு 1982-ல் `அக்னி சாட்சி' படத்துக்காக ரஜினி வீட்டில் ஒரு காட்சியைப் படமாக்கினார் இயக்குனர் கே.பாலசந்தர். அமைதியான சூழலில், பெரும் புள்ளிகள் குடியிருக்கும் பகுதியில் அழகாக, விசாலமாக இருந்தது அவர் வீடு.
படப்பிடிப்பு முடிந்ததும், என்னை ரஜினி தனியே அவர் ரூமுக்கு அழைத்துச் சென்றார். ரஜினியின் வளர்ச்சி, வாழ்வு பார்த்துப் பூரித்துப் போயிருந்தேன்.
"ரஜினி! இப்படி உங்களைப் பார்க்கறப்போ எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கு. உங்க வளர்ச்சியைப் பார்த்துப் பெத்தவங்க பூரிச்சுப் போயிருப்பாங்க இல்லையா?'' என்று கேட்டேன்.
"என்ன வளர்ச்சியடைஞ்சு, எவ்வளவு பெயர் வாங்கி என்ன சார் பிரயோஜனம்?'' என்றார், ரஜினி.
"ஏன்! இப்ப உங்களுக்கு என்ன குறை?''
"சின்ன வயசில நான் எவ்வளவு முரடனா இருந்தாலும், எவ்வளவு குறும்பு பண்ணினாலும் என்னைத் தட்டிக் கொடுத்துப் பெருமைப்பட்டவர் எங்க அப்பாதான். நான் அப்பாவோட செல்லம். ஆடம்பரமான இந்த வீட்டை வாங்கினதும், எங்கப்பா ஞாபகம் வந்திடுச்சு. `உங்க புள்ளே இப்போ எவ்வளவு பாப்புலர் ஆயிட்டான். எவ்வளவு அழகா வீடு வாங்கியிருக்கான் பாருங்கப்பா'ன்னு அவரைக் கூட்டி வந்து காட்டறத்துக்காகப் பெங்களூர் பறந்தேன்'' என்று கூறிய ரஜினி, சில நிமிடங்கள் மவுனமாக இருந்தார்.
"ஏன் ரஜினி! அப்பாவுக்கு என்ன ஆச்சு?'' என்று நான் கேட்டேன்.
"நான் அவரைப் போய்ப்பார்க்கறதுக்குக் கொஞ்ச நாள் முன்னாடிதான் அவர் தன்னோட கண் பார்வையை இழந்திட்டார்...''
கண்கலங்க, துக்கம் தொண்டையை அடைக்க அவர் இதைச் சொன்னபோது, சில நொடிகள் அதிர்ந்து விட்டேன்.
நினைப்பதெல்லாம் நடந்து, நிறைவாக வாழ்ந்து விட்டவர் எவருமே இல்லையோ?
இன்று இமயம்போல் வளர்ந்து பல கோடிகளைப்பார்த்து, கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயத்தில் குடியிருந்த போதிலும் ரஜினியின் எளிமையும், மனதில் பட்டதை மறைக்காமல் சொல்லும் குணமும் எனக்கு ரொம்பவும் பிடித்தவை.''
இவ்வாறு கூறினார், சிவகுமார்.