பைக்

இந்தியாவில் அறிமுகம் செய்ய முற்றிலும் புதிய எலெக்ட்ரிக் 2 வீலர் உருவாக்கும் ஹோண்டா?

Published On 2023-03-27 13:06 GMT   |   Update On 2023-03-27 13:06 GMT
  • ஹோண்டா நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்களை உருவாக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
  • ஹோண்டா எலெக்ட்ரிக் வாகனங்களில் கழற்றி மாற்றக்கூடிய பேட்டரிகள் வழங்கப்படும் என்றே கூறப்படுகிறது.

ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் தனது எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் வெளியீடு பற்றிய அதிகராப்பூர்வ தகவல்களை மார்ச் 29 ஆம் தேதி அறிவிக்க இருக்கிறது. இந்த நிலையில், ஹோண்டா நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் வாகன விவரங்கள் வெளியாகி உள்ளது.

அதன்படி ஹோண்டா நிறுவனம் இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் களமிறங்க திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. ஹோண்டா நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் வாகனமாக ஆக்டிவா எலெக்ட்ரிக் அறிமுகம் செய்யப்படும் என்றும் இது வரும் ஆண்டின் முதல் அரையாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. ஆக்டிவா எலெக்ட்ரிக் மாடலின் பேட்டரியை கழற்றும் வசதி வழங்கப்படாது என்றே தெரிகிறது.

 

இதுதவிர K4BA எனும் குறியீட்டு பெயர் கொண்ட எலெக்ட்ரிக் மொபெட் ஒன்றை ஹோண்டா உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த எலெக்ட்ரிக் இருசக்கர வாகனம் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என்றும், இது ஹோண்டா நிறுவனத்தின் கழற்றி மாற்றக்கூடிய சேவையை கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த சேவையை ஹோண்டா நிறுவனம் 2021 வாக்கில் துவங்கியது.

இதனை தற்போது எலெக்ட்ரிக் ஆட்டோக்கள் பயன்படுத்தி வருகின்றன. இந்திய சந்தையில் முன்னணி இருசக்கர வாகனங்கள் உற்பத்தியாளராக விளங்கும் ஹோண்டா எலெக்ட்ரிக் வாகன பிரிவில் சற்று தாமதமாகவே களமிறங்கி இருக்கிறது. அடுத்த ஆண்டு துவங்கி இந்த பிரிவில் அதிக கவனம் செலுத்த ஹோண்டா நிறுவனம் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. எனினும், இது பற்றிய முழு விவரங்கள் மார்ச் 29 ஆம் தேதி தெரியவரும். 

Tags:    

Similar News