பைக்

ஜூன் 1 முதல் ஃபேம் 2 திட்ட பலன்கள் குறைப்பு - EV வாங்குவோர் ஷாக்!

Published On 2023-05-22 07:29 GMT   |   Update On 2023-05-22 07:29 GMT
  • ஃபேம் 2 திட்டத்திற்காக அரசாங்கம் சார்பில் ரூ. 2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டு இருந்தது.
  • ஒரு கிலோவாட் ஹவர் பேட்டரி-க்கு ரூ. 15 ஆயிரம் வரை மானியம் வழங்கப்பட்டு வந்தது.

இந்தியாவில் ஜூன் 1 ஆம் தேதி முதல் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் விலை உயர்த்தப்பட இருப்பது உறுதியாகி விட்டது. எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் விற்பனையை ஊக்குவிக்கும் நோக்கில் மத்திய அரசு FAME-II (Faster Adoption and Manufacturing of Hybrid and Electric Vehicles) திட்டம் அறிவிக்கப்பட்டது.

இந்த திட்டத்தின் கீழ் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களில், இதுவரை ஒரு கிலோவாட் ஹவர் பேட்டரி-க்கு ரூ. 15 ஆயிரம் வரை மானியம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது இந்த தொகை ரூ. 10 ஆயிரமாக குறைக்கப்படுவதாக மத்திய கனரக தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் மொத்த மானிய தொகை 15 சதவீதமாக குறைக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக இது 40 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஃபேம் 2 திட்டத்திற்காக அரசாங்கம் அறிவித்து இருந்த ரூ. 2 ஆயிரம் கோடி தொகை கிட்டத்தட்ட முழுமையாக பயன்படுத்தப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து உடனடியாக மானியத்தை ரத்து செய்வது சந்தையில் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தால், எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கான மானியம் ரூ. 1500 கோடி கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

தற்போது வாகன உற்பத்தியாளர்கள் மானியத் தொகையை பெற்றுக் கொள்ளும் வசதி வழங்கப்பட்டு வருவதாகவே தகவல்கள் வெளியாகி வருகின்றன. தற்போது கூடுதலாக அறிவிக்கப்பட்டு இருக்கும் ரூ. 1500 கோடி நிதி ஆகஸ்ட் மாத வாக்கில் காலாவதியாகும் என்று கூறப்படுகிறது. 

Tags:    

Similar News