ஆட்டோமொபைல்
பஜாஜ் செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் முன்பதிவு விவரம்
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் முன்பதிவு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் முன்பதிவினை கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியாவில் தற்காலிகமாக நிறுத்தியது.
தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் முன்பதிவுகள் ஜூலை மாத வாக்கில் மீண்டும் துவங்கும் என கூறப்படுகிறது. இதனை பஜாஜ் ஆட்டோ நிறுவன நிர்வாக இயக்குனர் ராகேஷ் ஷர்மா, புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான உதிரிபாகம் சீனாவின் வுகானில் இருந்து வருவதாக தெரிவித்தார்.
இதன் காரணமாக ஸ்கூட்டரின் விநியோக பணிகளில் தாமதம் ஏற்பட்டது. எனினும், இந்த பாகங்கள் தற்சமயம் இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால் ஸ்கூட்டரின் உற்பத்தி விரைவில் துவங்கும் என அவர் தெரிவித்தார். மீண்டும் உற்பத்தி துவங்கினால், ஸ்கூட்டருக்கான முன்பதிவுகள் துவங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.
பிப்ரவரி 29 ஆம் தேதிக்கு முன் செட்டாக் ஸ்கூட்டரை வாங்க முன்பதிவு செய்தவர்களுக்கு விநியோகம் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாத வாக்கில் துவங்கும் என பஜாஜ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்து விட்டது. இந்நிலையில், இதன்பின் எடுக்கப்படும் முன்பதிவுகளுக்கான விநியோகம் செப்டம்பர் மாதத்திற்கு பிறகே துவங்கும் என தெரிகிறது.