ஆட்டோமொபைல்
பஜாஜ் செட்டாக் முன்பதிவுகள் மீண்டும் துவக்கம்
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் முன்பதிவுகள் மீண்டும் துவங்கி இருக்கிறது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவுகளை மீண்டும் துவங்கியுள்ளது. தற்சமயம் முன்பதிவு பஜாஜ் ஆன்லைன் தளத்தில் நடைபெறுகிறது. இதன் விநியோகம் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பஜாஜ் செட்டாக் எலெக்ட்ரிக் விற்பனை இந்தியாவில் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் துவங்கியது. முதற்கட்டமாக இந்த ஸ்கூட்டர் பூனே மற்றும் பெங்களூரு நகரங்களில் விற்பனை செய்யப்பட்டது.
எனினும், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மற்ற நிறுவனங்களை போன்று பஜாஜ் நிறுவனமும் தனது பணிகளை முழுமையாக நிறுத்தியது. பின் நாடு தழுவிய ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதும் பஜாஜ் தனது பணிகளை படிப்படியாக துவங்கியது.
இதன் காரணமாக பஜாஜ் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவுகளை துவங்கியுள்ளது. செட்டாக் ஸ்கூட்டரின் விநியோகம் ஊரடங்கு அறிவிக்கும் முன் துவங்கியது. எனினும், ஊரடங்கு காரணமாக விநியோகம் முழுமையாக நிறுத்தப்பட்டது.