ஆட்டோமொபைல்
மாருதி ஆல்டோ

புதிய முறையில் கிடைக்கும் செய்த மாருதி சுசுகி வாகனங்கள்

Published On 2020-09-26 09:36 GMT   |   Update On 2020-09-26 09:36 GMT
மாருதி சுசுகி நிறுவன கார் மாடல்கள் புதிய முறையில் கிடைக்கும் என அந்நிறுவனம் அறிவித்து இருக்கிறது.


மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் புதிய வாகனங்களுக்கு சந்தா முறை திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. மாருதி சுசுகி சப்ஸ்கிரைப் என அழைக்கப்படும் புதிய திட்டம் தற்சமயம் டெல்லி, என்சிஆர் மற்றும் பெங்களூரு பகுதிகளில் அமலாகி இருக்கிறது.

சப்ஸ்கிரைப் திட்டம் முற்றிலும் புதிய முறையில் கார்களை வாங்காமல் அவற்றை பயன்படுத்த வழி செய்கிறது. இதில் வாடிக்கையாளர்கள் அனைத்து கட்டணங்களையும் உள்ளடக்கிய தொகையை செலுத்தி புதிய காரை பயன்படுத்தலாம். இதில் கார் பராமரிப்பு, இன்சூரன்ஸ் மற்றும் ரோடு-சைடு அசிஸ்டன்ஸ் உள்ளிட்டவை அடங்கும்.



இந்த திட்டத்தை செயல்படுத்த மாருதி சுசுகி நிறுவனம் ஆரிக்ஸ் ஆட்டோ எனும் தனியார் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது. புதிய திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட மாடல்கள் மட்டும் தற்சமயம் வழங்கப்படுகின்றன. 

அந்த வகையில் வாடிக்கையாளர்கள் புதிய ஸ்விப்ட், டிசையர், விட்டாரா பிரெஸ்ஸா, எர்டிகா, புதிய பலேனோ, சியாஸ் மற்றும் எக்ஸ்எல்6 உள்ளிட்டவைகளை தேர்வு செய்து பயன்படுத்தலாம்.
Tags:    

Similar News