ஆட்டோமொபைல்
டொயோட்டா அர்பன் குரூயிசர்

டொயோட்டா அர்பன் குரூயிசர் முன்பதிவு தேதி அறிவிப்பு

Published On 2020-08-20 12:00 GMT   |   Update On 2020-08-20 12:00 GMT
டொயோட்டா நிறுவனத்தின் புதிய அர்பன் குரூயிசர் மாடலின் முன்பதிவு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் தனது அர்பன் குரூயிசர் காம்பேக்ட் எஸ்யுவி மாடலின் முன்பதிவு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. புதிய அர்பன் குரூயிசர் மாடலின் முன்பதிவு ஆகஸ்ட் 22 ஆம் தேதி துவங்க உள்ளது.

புதிய அர்பன் குரூயிசர் மாடலுக்கான முன்பதிவு ஆன்லைன் அல்லது அருகாமையில் உள்ள டொயோட்டா விற்பனையகங்கம் சென்று முன்பதிவு செய்யலாம். புதிய அர்பன் குரூயிசர் மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 11 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. 



அர்பன் குரூயிசர் மாடலின் முன்புறம் புதிய வடிவமைப்பு வழங்கப்படும் என தெரிகிறது. இந்த மாடலில் முற்றிலும் வித்தியாசமான அலாய் வீல்கள், டெயில் லேம்ப்கள், இன்டீரியர் தீம் வழங்கப்படும் என தெரிகிறது.

காரின் உள்புறம் 7 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஸ்டீரிங் மவுண்ட் செய்யப்பட்ட ஆடியோ கண்ட்ரோல்கள், குரூயிஸ் கண்ட்ரோல், கிளைமேட் கண்ட்ரோல், கீலெஸ் என்ட்ரி, புஷ் பட்டன் ஸ்டார்ட் மற்றும் மல்டி இன்ஃபோ டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.

பாதுகாப்பிற்கு புதிய காரின் முன்புறம் டூயல் ஏர்பேக், ஏபிஎஸ், இபிடி, பின்புற பார்க்கிங் சென்சார்கள், ரியர் வயூ கேமரா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. அர்பன் குரூயிசர் மாடலில் 105 பிஎஸ் பவர் வழங்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்று் 4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் யூனிட் வழங்கப்படலாம்.
Tags:    

Similar News