ஆட்டோமொபைல்
ஜாவா ரோட்சைடு அசிஸ்டன்ஸ் திட்டம் இந்தியாவில் அறிமுகம்
ஜாவா நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ரோட்சைடு அசிஸ்டன்ஸ் திட்டத்தை இந்தியாவில் துவங்கி உள்ளது.
ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் இந்தியாவில் ரோடுசைடு அசிஸ்டன்ஸ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்திற்கான கட்டணம் ஆண்டுக்கு ரூ. 1050 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த திட்டத்தில் ஜாவா நிறுவனத்தின் அனைத்து மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இது நாடு முழுக்க 950 நகரங்களில் 24x7 அடிப்படையில், அதிகபட்சம் 100 கிலோமீட்டர்களுக்கு வழங்கப்படுகிறது.
ரோடுசைடு அசிஸ்டன்ஸ் திட்டத்தில் 100 கிலோமீட்டர்களுக்கு இலவச டோயிங் வசதி, ரோடுரைடு ரிப்பேர், பன்ச்சர் ரிப்பேர், கூடுதல் எரிபொருள், சாவி தொலைந்தால் மீட்பது, மருத்துவ அவசர நிலை உள்ளிட்டவைகளுக்கு உதவி வழங்கப்படும் என ஜாவா தெரிவித்து இருக்கிறது.
புதிய ரோடுசைடு அசிஸ்டன்ஸ் திட்த்திற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் வெளியிடப்படவில்லை. ஜாவா வாடிக்கையாளர்கள் தங்களது மோட்டார்சைக்கிள்களுக்கு ரோடுசைடு அசிஸ்டன்ஸ் திட்டத்தை மூன்று ஆண்டுகளுக்குள் தேர்வு செய்து கொள்ளலாம்.