ஆட்டோமொபைல்
1.34 லட்சம் கார்களை திரும்ப பெறும் மாருதி சுசுகி
மாருதி சுசுகி நிறுவனம் 1.34 லட்சம் கார்களை திரும்ப பெறுவதாக அறிவித்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
மாருதி சுசுகி நிறுவனம் தனது பலேனோ மற்றும் வேகன் ஆர் ஹேட்ச்பேக் மாடல்களை திரும்ப பெறுவதாக அறிவித்து இருக்கிறது. இரு மாடல்களிலும் என்ஜினுக்கு எரிபொருள் செலுத்தும் அமைப்பில் கோளாறு இருப்பது பற்றி ஆய்வு செய்ய திரும்ப அழைக்கப்படுகிறது.
நவம்பர் 15, 2018 முதல் அக்டோபர் 15, 2019 வரையிலான காலக்கட்டத்தில் உறப்த்தி செய்யப்பட்ட வேகன் ஆர் 1.0 லிட்டர் மாடல் மற்றும் ஜனவரி 8, 2019 முதல் நவம்பர் 4, 2019 வரை உற்பத்தி செய்யப்பட்ட பலேனோ பெட்ரோல் மாடல்கள் திரும்ப பெறப்படுகின்றன. ஒட்டுமொத்தமாக மாருதி சுசுகி நிறுவனம் 134885 யூனிட்களை திருபம் பெறுகிறது.
வேகன் ஆர் மாடல் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தங்களது மாடலிலும் இந்த கோளாறு உள்ளதா என்பதை மாருதி சுசுகி அதிகாரப்பூர்வ வலைதளம் சென்று அறிந்து கொள்ள முடியும். பலேனோ மாடல் பயன்படுத்துவோர் நெக்சா வலைதளம் சென்று மாடலில் கோளாறு உள்ளதா என அறிந்து கொள்ளலாம்.